விசேட செய்தி

  • alt text

    11000 புலிச்சந்தேக நபர்களையும் தொடர்ந்தும் சிறை வைக்க முடிவு! 11000 ஏக்கர் நிலத்தில் பண்ணை!!

    13. 03. 2010, (சனி) [தமிழீழ நேரம் 12:39]

    தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் 11000 விடுதலைப் புலிகள் போராளிகளையும் நீண்ட கால நோக்கில் சிறைப்படுத்தும் திட்டங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்குமாறு சர்வதேச சமுதாயம் குரல் கொடுத்துவரும் நிலையில் அதனை முறியடிக்கும் விதமாக அரசினால் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

செய்திகள்

  • ஈழத்தமிழினம் வாழ்ந்த ஆதாரங்கள் சிறிலங்காவால் இரண்டு ஆண்டுகளில் அழிக்கப்படும்

    13. 03. 2010, (சனி) [தமிழீழ நேரம் 13:13]
    alt text

    இன்னும் இரண்டு ஆண்டுகள் கழிந்தால் ஈழத்தில் தமிழினம் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் சிறீலங்காப்படையினரால் அழிக்கப்பட்டுவிடும். என்று தமிழகம் சென்றுள்ள ஏதிலிகள் தெரிவித்துள்ளார்கள். வன்னியில் சிறீலங்காப்படையினரின் வதை முகாம்களில் இருந்து பாதுகாப்பாக வெளியேறிய இளைஞர்கள் மூவர் மன்னார் கடல்வழியாக தமிழகத்தின் இரமேஸ்வரம் சென்றடைந்துள்ளார்கள். தமிழகம் சென்றுள்ள இளைஞர்களை கியூபிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணைக்கு உட்படுத்தியுள்ளார்கள்.

  • ஐநா செயலாளரை கடுமையாக திட்டியதாக ஜனாதிபதி சிங்களத்தில் தெரிவிக்கின்றார். ஆனால் ஆங்கிலத்தில் அவர் மண்டியிட்டுள்ளார் ‐ ரில்வின் சில்வா

    13. 03. 2010, (சனி) [தமிழீழ நேரம் 13:10]
    alt text

    அரசாங்கம் அனைத்து விடயங்களை மறைத்து சிங்களத்தில் பாரிய குரல் எழுப்பி வருவதுடன் வெளிநாடுகள் முன்னிலையில் மண்டியிட்டு அவர்களுக்கு தேவையான வகையில் செயற்பட்டு வருவதாக ஜே.வீ.பீயின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

  • இணையத்தில் வெளிவந்துள்ளது பெருஞ்சித்திரனாரின் தமிழீழம் நூல்

    13. 03. 2010, (சனி) [தமிழீழ நேரம் 13:00]
    alt text

    பாவலலேறு பெருஞ்சித்தனார் அவர்களால் எழுதப்பட்ட 'தமிழீழம்' எனும் நூல் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழீழத்தைப் பற்றி பாவலலேறு பெருஞ்சித்தனார் அவர்கள் எழுதி தென்மொழியில் வெளிவந்த கட்டுரைகள் மற்றும் குறிப்புக்களைத் தொகுத்து சென்னை பைந்தமிழ்ப் பாசறை புத்தகமாக வெளியிட்டிருந்தது.

  • முல்லைத்தீவின் கேப்பாப்புலவில் 2500 ஏக்கர் நிலத்தில் பாரிய படைத்தளம்!

    13. 03. 2010, (சனி) [தமிழீழ நேரம் 12:54]
    alt text

    முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவை மையப்படுத்திய இரண்டாயிரத்து ஐநூறு ஏக்கர் நிலப்பரப்பில் சிறீலங்காப் படையினரின் கூட்டுப்படைத்தளம் அமைக்கும் நடவடிக்கை குறித்த தகவல்கள் வெளியாயுள்ளன. வற்றாப்பளை புதுக்குடியிருப்பினை ஒன்றிணைக்கும் வீதியினை அண்மித்து அமைந்திருக்கும் கொண்டமடு, உடையாவெளி, வாவியடி, கேப்பாபுலவு, சூரிபுரம், சீனியாமோட்டை ஆகிய கிராமங்களை ஆக்கிரமித்தே இப் படைத்தளம் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

  • ஓமந்தை தொடருந்து நிலையம் அடுத்த மாதம் திறக்கப்படுகிறது

    13. 03. 2010, (சனி) [தமிழீழ நேரம் 12:50]
    alt text

    ஓமந்தை தொடருந்து நிலைய புனரமைப்பு பணிகள் நிறைவடையும் கட்டத்தை அடைந்திருப்பதாகவும் அடுத்த மாதம் 5ம் திகதி இது திறந்து வைக்கப்படும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. வடக்கு பகுதிக்கான தொடருந்துப் பாதை சீரமைப்புப் பணிகளின் முதற் கட்டமாக வவுனியா தொடக்கம் ஓமந்தை வரையிலான தொடருந்துப் பாதை மீளமைக்கப்பட்டு வருகின்றது.

  • தேசியத்தலைவரின் தாயார் கனடாவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளார்

    13. 03. 2010, (சனி) [தமிழீழ நேரம் 12:47]
    alt text

    தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயாரை கனடாவிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.   கனடாவில் வசித்து வரும் பிரபாகரனின் சகோதாரி வினோதினி ராஜேந்திரனிடம், அவரது தயாரானா பார்வதிபிள்ளை வேலுப்பிள்ளை அனுப்பி வைக்கப்படவுள்ளார்.

  • இலங்கையில் ஊடக சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு

    13. 03. 2010, (சனி) [தமிழீழ நேரம் 12:43]
    alt text

    இலங்கையில் ஊடக சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அறிவித்துள்ளது.   தமக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படக் கூடும் என்ற அச்சுறுத்தல் காரணமாக அநேகமான ஊடகவியலாளர்கள் தமது கருத்துக்களை சுய கட்டுப்பாட்டுடன் வெளியிட்டு வருவதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

  • போரின் இறுதிகட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை செய்தது என்ன? – கஜேந்திரன் விளக்கம்

    13. 03. 2010, (சனி) [தமிழீழ நேரம் 12:42]
    alt text

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளான தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான தேசம், இறைமை ஆகியவறின் அடிப்படையிலான அரசியல் தீர்வை பெற்றுக் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பாகும் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் யாழ்மாவட்ட வேட்பாளர் கஜேந்திரன் வெளியிட்டுள்ள ஊடகஅறிக்கை தெரிவிக்கின்றது. அவ்வறிக்கையின் முழுவடிவம் வருமாறு:

  • 11000 புலிச்சந்தேக நபர்களையும் தொடர்ந்தும் சிறை வைக்க முடிவு! 11000 ஏக்கர் நிலத்தில் பண்ணை!!

    13. 03. 2010, (சனி) [தமிழீழ நேரம் 12:39]
    alt text

    தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் 11000 விடுதலைப் புலிகள் போராளிகளையும் நீண்ட கால நோக்கில் சிறைப்படுத்தும் திட்டங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்குமாறு சர்வதேச சமுதாயம் குரல் கொடுத்துவரும் நிலையில் அதனை முறியடிக்கும் விதமாக அரசினால் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

  • தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் யாழ்ப்பாணத்தில் வெளியீடு

    12. 03. 2010, (சனி) [தமிழீழ நேரம் 17:13]
    alt text

    தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 2010 பொதுத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் இன்று யாழ்ப்பாணத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்வு இன்று முற்பகல் 11மணியளவில் யாழ். தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவை சேனாதிராசா தலைமையில் நடைபெற்ற  இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் அனைவரும் பங்குகொண்டிருந்தனர்.

  • தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தற்போதைய அரசாங்கம் ஒருபோதும் தீர்வைப் பெற்றுக் கொடுக்காது – சோமவன்ச

    12. 03. 2010, (சனி) [தமிழீழ நேரம் 12:06]
    alt text

    இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் உட்பட உள்நாட்டில் காணப்பட்ட ஏனைய ஜனநாயகப் பிரச்சினைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கும், சர்வதேசத்துக்கும் வழங்கிய உறுதிமொழிகளை இலங்கை அரசாங்கம் மீறியுள்ளது. இதனால், பாரியளவிலான சர்வதேசத்தின் உதவிகளை இழந்துள்ளதுடன் அநாவசியமான பகையையும், தலையீடுகளையும் தேடிக்கொண்டுள்ளது. என ஜே. வி.பி. யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார்.

  • ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவது மற்றும் கொலைஞர்கள் சுதந்திரமாக தப்பிச் செல்வதில் இலங்கை நான்காம் இடம்

    12. 03. 2010, (சனி) [தமிழீழ நேரம் 12:05]
    alt text

    ஊடகவியலாளர்கள் அடிக்கடி கொல்லப்படுவது மற்றும் கொலைஞர்கள் சுதந்திரமாக தப்பிச் செல்லும் சம்பவங்கள் இடம் பெறும் நாடுகள் பற்றி ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் குழு எடுத்த மதிப்பீட்டில் ஈராக், சோமாலியா, சியறாலியோன் ஆகியவற்றை அடுத்து இலங்கை நான்காம் இடத்தை வகிக்கிறது.

  • அவசரகால சட்டத்தை நீக்குமாறு கனடா கோரிக்கை! மனிதஉரிமைகள் கடுமையாக மீறப்படுவதாக அமெரிக்கா காட்டம்!!

    12. 03. 2010, (சனி) [தமிழீழ நேரம் 12:03]
    alt text

    சிறிலங்காவில் அமுலில் இருக்கும் அவசரகால சட்டத்தை நீக்குமாறு கனடா அரசு கேட்டுள்ளது. இதேவேளை மனிதஉரிமைகள் மீறல்களை முடிவுக்கு கொண்டுவருமாறு அமெரிக்க அரசு சிறிலங்கா அரசை கேட்டுள்ளது. அவசரகால சட்டத்தை நீக்கினால் இரகசிய முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 10 000 இற்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகள் சந்தேக நபர்களை விடுவிக்கவேண்டிவரும் என சிறிலங்கா அமைச்சர் ஒருவர் முன்னர் கருத்துவெளியிட்டிருந்தார்.

  • வன்னி மக்களின் உடைமைகள் சூறையாடப்பட்டு தென்னிலங்ககைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன – சுரேஸ் பிறேமசந்திரன்

    12. 03. 2010, (சனி) [தமிழீழ நேரம் 12:02]
    alt text

    வன்னி மக்களின் பொருட்கள் சூறையாடப்பட்டு தென்னிலங்கைக்கு எடுத்துசெல்லப்பட்டுள்ளது. ஆனால் மீளக்குடியேற்ற மக்கள் குடியிருக்க இடம் இன்றி விடப்பட்டுள்ளனர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

  • நளினி விடுதலை வழக்கில் முடிவு 29ல் தெரியும்

    12. 03. 2010, (சனி) [தமிழீழ நேரம் 5:00]
    alt text

    இராஜீவ் படுகொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பிறகு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு வேலூர் சிறையில் இருந்துவரும் நளினியின் முன் விடுதலை வழக்கில் வரும் 29ஆம் தேதி முடிவு தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தித் தொகுப்பு

செய்திகள் - புலம்பெயர் தமிழர்

நெருடல் இணையபக்கத்தை உங்கள் உலாவியின் தொடக்கப்பக்கம் ஆக்க இங்கே அழுத்தவும்.

முக்கிய செய்திகளை மின்னஞ்சலில் பெற..

மின்னஞ்சல் முகவரி:

 

புகைப்படங்கள்

Copyright © 2010 நெருடல். All rights reserved.