மட்டக்களப்பில் வியாழன் 22 05 08 அன்று பிள்ளையான் குழுவினருக்கும் காத்தான்குடி முஸ்லிம்களுக்குமிடையே ஏற்பட்ட பதற்றமான சு10ழ்நிலையைத் தொடர்ந்து சுமார் 100க்கும் மேற்பட்ட முஸ்லிம் வர்த்தகர்கள் மட்டக்களப்பில் வைத்து பிள்ளையான் குழுவினரால் மிக மோசமாகத் தாக்கப்பட்டுள்ளனர். இது பற்றி மேலும் தெரியவருவதாவது
நிறைவேற்று அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ள அரச தலைவர் மகந்த ராஜபக்ச, கிழக்கில் இனக்கலவரத்திற்கு தூபமிட்டு மக்களை பலிக்கடாக்களாக்கியுள்ளார் என்று ஜே.வி.பி. கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் தற்போது தோன்றியுள்ள பதற்றமான சூழ்நிலைகளைத் தொடர்ந்து அங்கு தமது பணிகளை இடைநிறுத்துவதற்கு அனைத்துலக தொண்டர் அமைப்புக்கள் தீர்மானித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறிலங்கா அரசின் கேவலமான தோற்றப்பாட்டை மறைத்து வந்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபைக்கான உறுப்புரிமையும் தற்போது பறிபோய் உள்ளது. எம்மால் அதனை தக்கவைக்க முடியவில்லை. எனவே நாம் எங்கு போகின்றோம்? என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை உறுப்புரிமை இழந்தமையானது ஐக்கிய நாடுகள் சபையின் வெற்றியாகும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் மகிழ்ச்சி
அடைந்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் கற்பாட்டுப் பகுதியில் இன்று சிறிலங்கா வான்படைக்குச்சொந்தமான கிபிர் வானூர்திகள் மக்கள் குடியிருப்புக்கள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளன.
மணலாறில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சியினை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இதில் 5 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். படைக்கலங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகள், போராளிகள், தாயக மக்கள், உலகத் தமிழினம் விடைகொடுக்க மாவீரன் பிரிகேடியர் பால்ராஜ் தாய் மண்ணில் இன்று விதைக்கப்பட்டார்.