பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

அழுத்தங்களுக்கு அடிபணியாது பணிப்புறக்கணிப்புக்கு முழுமையான ஆதரவு-மக்கள்படை
Thursday, 29 June 2006

எந்தவித அழுத்தங்களுக்கும் அடிபணியாது பணிப்புறக்கணிப்பில் முழுமையாகப் பங்கேற் பதன்மூலம் படையினருக்கு எமது முழுமையான எதிர்ப்பைத் தெரிவிப்போம். இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளது யாழ். மாவட்ட பொங்கியெழும் மக்கள்படை.  இது தொடர்பாக நேற்று ஊடகங்களுக்குஅனுப்பிவைக்கப்பட்ட அறிக்கையில்,

மேலும் படிக்க…
 
இந்தியா நட்புக் கரத்தை இறுகப் பற்றட்டும்!
Wednesday, 28 June 2006
விடுதலைப்புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் இந்திய தொலை க்காட்சி;க்கு அளித்த செவ்வி ஒன்றில் ராஜீவ்காந்தி படுகொலைக்கு வருத்தம் தெரிவித்தி ருக்கிறார். இந்திய அரசும், இந்திய மக்களும் இந் நிகழ்வை பெருந்தன்மையுடன் மறந்து கடந்த காலத்தை புறந்தள்ளி இலங்கை இனப் பிரச்சினையில் புதிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் படிக்க…
 
மேஜர் ஜெனரல் பராமி குலதுங்க லெப்டினட்ற் ஜெனரல் பதவிக்கு தரமுயர்த்தப்பட்டார்
Wednesday, 28 June 2006

கொழும்பு பன்னிப்பிட்டியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற  தாக்குதலில் கொல்லப்பட்ட மேஜர் ஜெனரல் பாரமி குலதுங்க லெப்டினன்ற் ஜெனரல் பதவிக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இதற்கான பணிப்புரையை வழங்கியுள்ளார்.

 
ஒப்பறேஷன் புறோவல் நடவடிக்கைக்கு தயாராகி வரும் இந்திய "றோ" அமைப்பு
Wednesday, 28 June 2006

விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை அடக்கி மௌனமாக்கி விடுவதற்கான நடவடிக்கைகளை இந்தியா வின் முன்னணி உளவு நிறுவனமாகிய "றோ" அமைப்பு  எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இந்தியாவிலிருந்து வெளியாகும் தெல்கா இணையத்தளம் இந்தத்தகவல்களை வெளியிட்டிருப்பதாகவும் மேலும் தெரிவிக்க ப்பட்டுள்ளது.

மேலும் படிக்க…
 
விளையாட்டு வீரர்களும் எமது தமிழ் தேசியத்திற்கு பெருமையை தேடி தந்துள்ளார்கள்
Wednesday, 28 June 2006

ஆசிய நாடுகளின் உதைபந்தாட்ட அமைப்பினால் நடாத்தப்பட்ட ஒரு நாள் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி ஜீன் 24 2006 சனிக்கிழமை North York,இல் உள்ள  மாபெரும் விளையாட்டு அரங்கான ESTHERSHINER உதைபந்தாட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

மேலும் படிக்க…
 
மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள் 9பேர் கடத்தல்.
Wednesday, 28 June 2006

மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள் 8பேர் கடத்தபட்டுள்ளனர். நேற்றயதின் இரவு சிவில் உடையில் புகுந்த பொலிசார் இவர்களை கடத்தி சென்றுள்ளதாக அறியமுடிகிறது மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 9 தமிழ் மாணவர்கள் இரவு 12:00 மணிய ளவில், சொய்சாபுர தொடர்மாடிப்பகுதியில் வைத்து கடத்தப்பட்டனர். இரவு வேளையில் சிவில் உடையில் வீடு சோதனையிடுவதாக வந்த பொலிசாரே இவர்களை கடத்தியதாகவும், சிவில் உடையில் வந்த பெலிசாரை தங்களால் அடையாளம் காணமுடியாது போனதாகவும், அறியமுடிகிறது.

மேலும் படிக்க…
 
கிளைமோர்த் தாக்குதல்: 3 பொதுமக்கள் பலி
Wednesday, 28 June 2006

மன்னார் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான முசலியில் சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் அப்பாவிப் பொதுமக்கள் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க…
 
ஈழத் தமிழர் பாதுகாப்பு குறித்து சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்
Wednesday, 28 June 2006

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஈழத்தமிழர் பாதுகாப்பு குறித்த கலந்தாய்வுகூட்டம சென்னையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் தலைமை தாங்கினார்.  அப்போது அவர் கூறியதாவது:

மேலும் படிக்க…
 
ஒட்டு மொத்த தமிழினமும் போராடுவதற்கு தயாராகி விட்டார்கள்
Wednesday, 28 June 2006
ஒட்டுமொத்த தமிழினமும் போராடினால்தான் உரிமைகளை வென்றெடுக்கமுடியும் என்ற எண்ணம் தற்போது தமிழ் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.  இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட கட்டளைத் தளபதி கேணல் பானு தெரிவித்தார். லெப்.கேணல் றீகன் படைய தொடக்க பயிற்சிக்கல்லூரியில் பயிற்சிகளை நிறைவு செய்து கொண்ட அணியினருக்கான இறுதி நாள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது கட்டளைத் தளபதி கேணல் பானு இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் படிக்க…
 
சிறீலங்காவின் நீருந்து விசைப்படகு மூழ்கடிப்பு.
Wednesday, 28 June 2006

புத்தளம் கற்பிட்டிக் கடற்பரப்பில் கடற்புலிகளுக்கும் சிறீலங்கா கடற்படையினருக்கும் இடையில் உக்கிர மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து வடக்கே 145 கிலோ மீற்றர் தொலைவில் சம்வம் இடம்பெற்றுள்ளது.விடுதலைப்புலிகளின் கடற் கலன்களை நோக்கி இன்று சிறீலங்கா கடற்படையினர் இன்று புதன்கிழமை காலை 11.45 மணியளிவில் இரு நீருந்து விசைப்படகில் வலிந்து தாக்குதலைத் தொடுத்தன.(மேலதிக விபரம் இணைப்பு)

மேலும் படிக்க…
 
அதிவேக கரையோர கண்காணிப்பு கப்பல் ஒன்றை இத்தாலி இலங்கைக்கு வழங்கியது.
Wednesday, 28 June 2006

இலங்கைக்கு இத்தாலி அதிவேக கரையோர பாதுகாப்பு கப்பலொன்றை வழங்கியுள்ளது.  இலங்கையிலிருந்து இத்தாலிக்கு இலங்கையர்களும் வேறு நாட்டவர்களும் சட்ட விரோ தமாக குடியேறச் செல்வதைத் தடுக்கும் நோக்கிலேயே  கரையோர கண்காணிப்பு நடவடிக் கையில் ஈடுபட இக் கப்பலை வழங்கியுள்ளதாகத் தெரிவருகிறது.நவீன கருவிகளுடன் கடலில் மூழ்க முடியாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இலங்கையிடம் கையளிப் பதற்காக இந்தக் கப்பலை இத்தாலி விஷேடமாக வடிவமைத்துள்ளது.

 
இன்னும் வேறு சில…
<< முதல் < முந்தைய 121 122 123 124 125 126 127 128 129 130 அடுத்த > கடைசி >>


© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..