|
Wednesday, 06 September 2006 |
|
திருகோணமலை மாவிலாறு பிரதேசத்தின் மீது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதி களில் இருந்து எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவி த்துள்ளனர். அல்லை மற்றும் கல்லாறு படை முகாம்களுக்கு தொலைவில் உள்ள கட்டு பாடற்ற பிரதேசங்களில் இருந்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன. |
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 06 September 2006 |
|
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினரை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (08.09.06) இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் புதுடில்லியில் சந்தித்துப் பேசக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.இது குறித்து சென்னையில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கூறியதாவது: |
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 06 September 2006 |
|
யாழ்ப்பாணத்தில் இன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் இருவர் கொல்ல ப்பட்டுள்ளனர். இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.யாழ். தனங்காவில் பிள்ளையார் கோவில் பகுதியில் இன்று புதன்கிழமை காலை 7.30 மணியளவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இராமலிங்கம் வீதி, திருநெல்வேலியைச் சேர்ந்த வீடியோ நிலைய உரிமையாளரான சிவராசா சிவசேகர் (வயது 28) என்பவர் கொல்லப்பட்டார். உந்துருளியில் சென்ற ஆயுததாரிகள் அவரைச் சுட்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். |
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 06 September 2006 |
|
இலங்கையில் மனித உரிமைகள் நிலைமையானது குறிப்பிடத்தகுந்தளவு சீர்குலைந்து போய்விட்டது என்று ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சாட்டியுள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் நீதிக்குப் புறம்பான கொலைகள் தொடர்பிலான பிரிவின் தூதுவர் பிலிப் அல்ஸ்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.அவர் இன்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: |
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 06 September 2006 |
|
வாழைச்சேனையில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான ஈ.பி.டி.யின் ஆதரவாளர்கள் இருவர் நேற்று செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.வாழைச்சேனை விபுலானந்தா வீதியில் வசித்து வந்த பேத்தாளை மீனவர் சங்கத்தின் தலைவரான நல்லதம்பி பூபாலரத்தினம் (வயது 48) மற்றும் பேத்தாளை முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை ரங்கன் என்ற சத்யகுமார் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. |
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 06 September 2006 |
|
அம்பாறை ஆக்கிரமிப்பு முறியடிப்புச் சமரில் 18 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் 25 பேர் படுகாயமடைந்ததாகவும் உடும்பன்குளம் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் வீரமணி தெரிவித்துள்ளார்.திருக்கோவில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் இன்று புதன்கிழமை அதிகாலை 5.20 மணி முதல் பாரிய அளவிலான எறிகணைத் தாக்குதல் களுடன் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டனர். |
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 06 September 2006 |
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கடைப்பிடிக்காத நிலைக்கு சிறிலங்கா அரசாங்கம் தள்ளியிருக்கிறது என்றும் தமிழீழ மக்களின் பலத்தையும் உணர்வையும் சீண்டிப்பார்த்திருக்கும் மகிந்த ராஜபக்ச அதற்கான விளைவை விரைவில் சந்திப்பார் என்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் எச்சரித்துள்ளார். |
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 06 September 2006 |
|
நேற்றிரவு 10.30மணி தொடக்கம் அம்பாறை காஞ்சிரங்குடாவில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிகளான கஞ்சிக்குடிச்சாறு மற்றும் பாவட்டைப்பிரதேசங்களை நோக்கி விசேட அதிரடிப்படையினரின் தாண்டியடி மற்றும் காஞ்சிரங்குடா முகாங்களிலிருந்து பாரிய எறிகணை வீச்சுத் தாக்குதல்களுடன் படை நகர்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. |
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 06 September 2006 |
|
சிறிலங்கா சமாதான செயலகத்தின் பிரதிப் பணிப்பாளர் கேதீஸ் லோகநாதன் படுகொலையில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு தொடர்பிருப்பதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.Global Electro-Newsnet என்ற ஊடகத்தில் இச்செய்தி வெளியானதாக தமிழ்கனேடியன் இணையதளம் பிரசுரித்துள்ளது.அச்செய்தி விவரம்: |
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 06 September 2006 |
|
பொலிஸ் திணைக்களத்தின் கீழ் இருந்த விசேட அதிரடிப்படைப் பிரிவு முதலாம் திகதி முதல் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.விசேட அதிரடிப்படைப் பிரிவு 1983ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது முதல் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்து வந்தது. பின்னர் 1996ஆம் ஆண்டு பொலிஸ்மா அதிபரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப் பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை தற்போது விசேட அதிரடிப் படைப் பிரிவு பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதால் 5ஆயிரம் விசேட அதிரடிப் படையினருக்கு விசேட சலுகைகள் வழங்கப் படும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். |
|
|
Wednesday, 06 September 2006 |
|
இன்று விசேடஅதிரடிப்படையினரும் கருணாகுழுவினரும் புலிகளின் நிருவாக பகுதிகளுக் குள் முன்னேற முற்பட்டதாகவும் இதை தடுத்து நிறுத்த புலிகள் தாக்குதல் மேற்கொன்ட தாகவும் இதன் போது கருணாகுழுவில் நால்வரின் சடஙலங்கள் அங்கு காணப்படு வதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.இதைவிட பலர்காயமடை ந்துள்ளதாவும் ஆரம்பகட்ட தகவல்கள் பொதுமக்கள் தரப்பியிருந்து வெளியாகியுள்ளது. |
|
|
|
<< முதல் < முந்தைய 161 162 163 164 165 166 167 168 169 170 அடுத்த > கடைசி >>
|
| தேடியதில் கிடைதவை… 2491 - 2505 / 3128 |