|
Friday, 25 August 2006 |
|
மலையக மக்கள் முன்னனியின் தலைவர் பொ.சந்திரசேகரன் இன்று இலங்கை அரசுடன் இனைந்துகொண்டுள்ளார். மலையக மக்களை காக்கவும் வாக்கு போட்ட மக்களை காக்கவும் இவ்வாறு இனைந்துள்ளதாக சந்திரசேகரன் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார். இதே நேரம் தமிழர் எல்லாரும் ஒன்றினைந்து ஒரு பொது திட்டத்தின் கீழ் வேலை செய்யவேண்டும் என்று வன்னிக்கு சென்று பகிரங்க ஊடகப் பேட்டி கொடுத்து புலிகளுடன் இணைந்து கொள்வேன் என்று மகிந்த ராஜபக்சவுக்கு மிரட்டல் விட்ட ஆறுமுகம் தொண்டமானும் இன்று தன்னை அரசுடன் இணைத்துள்ளார். |
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 25 August 2006 |
|
யாழ். சமரில் கொல்லப்பட்ட சிறிலங்கா இராணுவத்தினரின் சடலங்களை இரகசியமாக எரித்து வருவதாக சிறிலங்கா அரசாங்கம் மீது ஐக்கிய தேசியக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 25 August 2006 |
|
சிறார் கடத்தலில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினர் ஈடுபடுவதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சட்ட ஆலோசகர் ஜேம்ஸ்ஞ் ரோஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இலங்கைப் பயணம் மேற்கொண்டுள்ள அவர் கூறியதாவது:
சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினர் சிறார் கடத்தலில் ஈடுபடுகின்றனர்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 25 August 2006 |
|
கருணா குழுவினர் அப்பாவி இளைஞர்களை வீணாக கொல்ல கொடுப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள். கடத்தி செல்லப்படும் ஏழை குடும்பத்து இளைஞர் களிடம் பணம் அல்லது தமது இயக்கத்துடன் சேருமாறு மிரட்டுகின்றனர். |
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 25 August 2006 |
|
ஸ்ரீலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட இருவர் இன்று காலை 8.15 மணியள வில் வவுனியாவில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இராணுவச் சீருடையின்றி சாதாரண உடையுடன் இருந்த இராணுவச் சிப்பாயும் மற்றொரு வருமே கொல்லப்பட்டதாக தெரியவருகிறது. |
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 25 August 2006 |
|
அமெரிக்காவில் 8 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அமெரிக்காவின் முக்கிய புலனாய்வுப்பிரிவான எவ்பிஐ இவர்களை கைது செய்திருக்கிறது. இவர்கள் விடுத லைப்புலிகளுக்கு ஆயதம் வாங்க முயற்சித்ததாகவும், விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு அமெரிக்க அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுக்க முற்பட்ட தாகவும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்கள். உண்மையில் இந்தக் குற்றச்சாட்டு க்களைக் கேட்டு பெரும்பாலான தமிழர்கள் நகைக்கவே செய்தார்கள். |
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 25 August 2006 |
|
முகமாலையில் இன்று காலை இரு முனைகளுடாக முன்னேறுவதற்கு ஸ்ரீலங்கா இராணு வத்தினர் மேற்கொண்ட புதிய முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு ள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிக்கின்றன.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 25 August 2006 |
|
மட்டக்களப்பு பாலைமீன்மடுப் பிரதேசத்தில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் 5 தமிழர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.புதிய முகத்துவாரம் வீதியில் நேற்று வியாழக்கிழமை இரவு 7.45 மணிக்கு இச்சம்பவம் நடந்தது. |
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 24 August 2006 |
|
பளை மற்றும் பச்சிலைப் பள்ளி பகுதிகளில் நேற்று புதன்கிழமை நண்பகல் விமானக் குண் டுத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. நண்பகல் 12 மணியளவில் பளை மற்றும் பச்சிலைப் பள்ளி பகுதிகளில் `கிபிர்' விமானங்கள் நடத்திய மிகக் கடும் தாக்குதலில் பல வீடுகள் முற் றாக அழிந்துள்ளன. படையினரின் தொடர்ச்சியான தாக்குதல்களையடுத்து மக்கள் வெளி யேறிய வீடுகளை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் பல வீடு கள் அழிந்தன. இதேநேரம், வடமராட்சி மற்றும் தென்மராட்சி பகுதிகளிலிருந்து பளை மற்றும் பச்சிலைப் பள்ளி பகுதிகளை நோக்கி ஆட்லறி ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. |
|
|
Thursday, 24 August 2006 |
|
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை களில் ஈடுபடுவது குறித்து பரிசீலிப்பதற்கு, மூன்று நிபந்தனைகளை சிறீலங்கா அரசாங்கம் விதித்துள்ளது. |
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 24 August 2006 |
|
யாழ் தென்மராட்சிப் பகுதியில் மற்றொரு கிறிஸ்தவ பாதிரியார் கடத்தப்பட்டுள்ளார். கடத்த ப்பட்டவர் தென்மராட்சி மீசாலைப் பகுதியில் உள்ள கிறிஸ்தவ அப்போஸ்தல போதகரான 32 அகவையுடைய வின்சன் வினோதராசா என அடையாளம் காணப்பட் டுள்ளார்.இவருடன் இவரது மனைவி தங்கம் வினோதராசாவும் மற்றும் இவரது பிள்ளையும் காணாமல் போயுள்ளனர். |
|
|
|
<< முதல் < முந்தைய 171 172 173 174 175 176 177 178 179 180 அடுத்த > கடைசி >>
|
| தேடியதில் கிடைதவை… 2626 - 2640 / 3189 |