|
Friday, 01 September 2006 |
|
சிறிலங்கா அரசாங்கத்துக்கு உதவ தமது கட்சி தயார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 01 September 2006 |
|
வவுனியாவில் சிதைவடைந்த நிலையில் 16 தமிழ் இளைஞர்களின் சடலங்களை சிறிலங்கா இராணுவம் ஒப்படைத்துள்ளது.
சிறிலங்கா இராணுவத்தால் ஒப்படைக்கப்பட்ட இளைஞர்களின் சிலரது சடலங்களில் ஆண் உறுப்புகள் வெட்டப்பட்டும் சிலரது முகத்தில் அமிலங்கள் ஊற்றப்பட்டு எரிக்கப்பட்டும் இருந்ததாக வவுனியா மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 01 September 2006 |
|
தன்னார்வத் தொண்டர் படுகொலையுடன் சிறீலங்கா இராணுவத்திற்கு தொடர்பில்லை என்று கெகலிய ரம்புக்க வெல கூறினாலும் தனது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை, சிறீங்கா இராணுவமே அதற்கு பொறுப்பு என்பதற்கான போதிய ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக யுத்த நிறுத்த கண்காணிப்புக்குழு தலைவர் கூறியுள்ளார். |
|
|
Friday, 01 September 2006 |
|
ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கு முன்பாககண்டனப் பேரணியும் ஒன்றுகூடலும் |
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 01 September 2006 |
|
ஜனாதிபதியின் ஆலோசகர், பசில் ராஜபக்ச இந்திய தலைவர்களைச் சந்தித்து கலந்துரை யாடல்களை நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அரசாங்கத்தின், அழைப்பின் பேரில் அவசர விஜயம் ஒன்றை அவர் நேற்று முன்தினம் அவர் மேற் கொண்டார். இந்த விஜயத்தின் போது பசில் ராஜபக்ச இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் உட்பட்ட அதிகாரிகளை சந்திக்கிறார். இதேவேளை, இந்திய பாதுகாப்பு செயலர் ஷியாம் சரண் கடந்த வாரம் ஒஸ்லோவிற்கு விஜயம் செய்து இலங்கை விவகாரம் தொடர்பாக அங்கு பல கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்தியிருந்தார். இதன்போது, ஐக்கிய நாடுகள் சபையின் முன்னிலையில், இலங்கை விவகாரம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடைபெற வேண்டும் என முன் வைத்ததாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. |
|
|
Friday, 01 September 2006 |
|
யாழ்ப்பாணம் கோப்பாய் ராசவீதி இருபாலைப் பகுதியில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். நேற்று உந்துருளியில் வந்த இந்த இளைஞரை மற்றொரு உந்துருளியில் வந்தோர் துரத்திச்சென்று சுட்டுள்ளனர். கொல்லப்பட்ட இளைஞர் தப்பிச் செல்லும் வகையில், வீடு ஒன்றுக்குள் சென்ற போதும் துரத்தி வந்தவர்கள், அவரை வீட்டினுள் வைத்து சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இளைஞரின் சடலம் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை. |
|
|
Friday, 01 September 2006 |
|
திருகோணமலை கும்புறுபிட்டிப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரால் 15 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட இளைஞர்கள், குச்சவெளி சிறிலங்கா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.இதனிடையே திருகோணமலை நகர்ப்பகுதியில் வாய்பேச முடியாத இளைஞர் ஒருவரை சிங்களக் காடையர்கள் வெட்டிப் படுகொலை செய்துள்ளனர்.இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றுள்ளது. கொல்லப்பட்டவர் திருகோணமலை லிங்கநகர்ப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் என்றும் அவரது சடலம் நகர்ப்பகுதி சுடுகாடு ஒன்றில் வீசப்பட்டிருந்ததாகவும் திருகோணமலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. |
|
|
Thursday, 31 August 2006 |
|
திருகோணமலை சம்பூர் மற்றும் செல்வநகர் பிரதேசங்களில் இன்று அதிகாலை மேற்கொள் ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் போதும் மற்றும் படையினரின் தேடுதல் நடவடி க்கையின் போதும் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் பலியானதாக படை த்தரப்பு தெரிவித்துள்ளது. இந்த மோதல்களில் 14 படையினர் பலியானதுடன் 112 பேர் காயம டைந்துள்ளதாகவும் படைத்தரப்பு அறிவித்துள்ளது. |
|
|
Thursday, 31 August 2006 |
|
திருகோணமலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசபடைகளுக்கு மிடையில் தொடர்ந்து மோதல் இடம் பெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 31 August 2006 |
|
மூதூரில் பிரான்ஸ் உதவி நிறுவனமான அக்சன் பொயம் நிறுவனப்பணியாளர்கள் படு கொலை செய்யப்பட்டமை குறித்து உண்மையான தகவல்களை சிறிலங்கா அரசு வெளியிட வேண்டும் என ஐக்கிய நாடுகள்சபை கோரிக்கை விடுத்துள்ளது. |
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 30 August 2006 |
|
தற்போதைய மோதல்களை உடனடியாக நிறுத்தும்படி இந்தியாவும் மற்றும் அமெரிக்கா போன்ற சர்வதேச நாடுகளும் விடுத்த அழைப்பை இலங்கை அரசு நிராகரித்து விட்டது எனவும் திருகோணமலைத் துறைமுகத்தின் பாது காப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு சம்பூர்ப் பகுதியைக் கைப்பற்றித் தனது கட்டுப்பாட் டுக்குள் கொண்டு வந்த பின்னரே ஓய்வது என்பதில் இலங்கை அரசு உறுதியாக இருக் கிறது எனவும் புதுடில்லியில் வெளியான செய்திகள் தெரிவித்தன. |
|
மேலும் படிக்க…
|
|
|
|
<< முதல் < முந்தைய 181 182 183 184 185 186 187 188 189 190 அடுத்த > கடைசி >>
|
| தேடியதில் கிடைதவை… 2746 - 2760 / 3349 |