பிரதான பக்கம் arrow கட்டுரைகள்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English
viiravanakkam-nerudal-small2
கட்டுரைகள்

தலைமைக்கு குறிவைக்கும் ‘எதிரிகளும்’ அவர்களுடன் உறவு கொண்டாடும் ‘நண்பர்களும்’ அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 11 January 2008
அண்மைக்காலமாக செய்தி ஊடகங்கள் மூலமாக திணிக்கப்படும் ஒரு கருத்து, தமிழ் மக்களிற்கான தலைமையை தேசியத்தலைவர் திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் ஏற்றிருக்கும்வரை இலங்கைத்தீவில் அமைதி ஏற்படப்போவதில்லை என்பது. இந்தக் கருத்துக்களை பரப்புவர்களின் பட்டியலில், சிறிலங்கா இராணுவத்தளபதி சரத் பொன்சேகா, கோத்தபாய இராஜபக்ச, டக்ளஸ் தேவானந்தா முதல் கொணடு இந்திய இராணுவ அரசியல் ஆய்வாளர்கள், அவர்களுக்க வால் பிடிப்பவர்கள் என பலரும் அடங்குவர். இவர்களது அபிலாசைகள் வெவ்வேறாக இருந்தாலும் தத்தம் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதில் இவர்களுக்கு தமிழர் தலைமை முட்டுக்கட்டையாக இருக்கிறது என்பதனை உணர்ந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க…
 
அரசை ஜே.வி.பி. காப்பாற்றியது ஏன்? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 16 December 2007

வரவு-செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் ஒருவாறு அரசு தப்பிப்பிழைத்துவிட்டது. 47 பெரும்பான்மை வாக்குகளால் அரசு வெற்றிகண்டதாக பெருமை கொண்ட போதிலும் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 19 ஆம் திகதி இடம்பெற்றபோது ஜே.வி.பி.யின் ஒத்துழைப்பு இன்றி 118 வாக்குகளை பெற்றுக்கொண்டுவிட்டு மூன்றாவது வாசிப்பில் ஜே.வி.பி. ஒதுங்கி நின்று ஆதரவளித்த நிலையிலும் 114 வாக்குகளை மட்டுமே பெற்றுக் கொள்ள முடிந்துள்ளது. இது அரசுக்கு ஒரு பின்னடைவையே ஏற்படுத்தியிருப்பதை தெளிவாகக் காணக்கூடியதாக உள்ளது.

மேலும் படிக்க…
 
தமிழகத்தில் அரசியல் மயப்படுத்தப்படும் புலிகள் விவகாரம். அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 16 December 2007

விடுதலைப்புலிகளின் விவகாரம் தமிழகத்தின் அரசியலாகி விட்டதென இந்திய இராணுவத் தின் தென் பிராந்திய தளபதி லெப். ஜெனரல் நோபுள் தம்புராஜ் கூறிய குற்றச்சாட்டு அரசியல் கட்சிகளிடையே சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ள அதே வேளை புலிகள் தொடாபாக தமிழக ஊடகங்களில் மிகைப்படுத்தப்பட்டு வரும் செய்திகாளல் தமிழக பொலிஸார் குழப்பநிலையடைந்துள்ளனர்.

மேலும் படிக்க…
 
தென் இலங்கையில் தொடர்ந்தும் குண்டுகள் வெடிக்குமா? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 14 December 2007

தமிழர் தரப்பின் பொறுமை என்பது அதன் எல்லைக்கு வந்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றுமளவிற்கு, களநிலவரம் மாற்றமடைய ஆரம்பித்துவருகின்றது. கடந்த  05.12.2007 அன்று கெப்பிட்டிக்கொலாவ பிரதேசத்தில் பொதுமக்கள் பிரயாணம் செய்த பேரூந்து ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலும், அதனைத் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற சம்பவங்களும், களமுனையில் தமிழர் தரப்பு ஒரு புதிய பாதையில் பயணிக்க ஆரம்பித்து விட்ட ஒரு உண்மையை வெளிப்படுத்தி நிற்கின்றது.

மேலும் படிக்க…
 
மனித உரிமை மீறல்கள் விசாரணையின் இலட்சணம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 10 December 2007

இலங்கையில் இடம்பெற்று வருகின்ற மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்துவதற்கு ஐக்கியநாடுகள் அனுசரணையுடனான சர்வதேச கண்காணிப்பு கட்டமைப்பு ஒன்று ஏற்படு த்தப்பட வேண்டும் என்று உள்நாட்டு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளினால் நீண்டகாலமாகவே வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுவருகின்ற போதிலும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அது விடயத்தில் கிஞ்சித்தும் விட்டுக்கொடுப்பதற்குத் தயாராயில்லை.

மேலும் படிக்க…
 
பிரபாகரனின் மாவீரர் தின உரை தமிழகத்தில் புரட்சியை ஏற்படுத்துமா? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 04 December 2007

விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் சு,ப.தமிழ்ச்செல்வனின் படுகொலை யால் தமிழ் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை வழமைக்கு வந்த ஒரு சில நாட்களுக்குள்ளாகவே புலிகளின் தலைவர் பிரபாகரன் பேசிய பேச்சால் காங்கிரஸ் தலைவர்களும் மத்திய அரசின் உளவுப் பிரிவும் கொதித்துப் போயுள்ளது.

மேலும் படிக்க…
 
மாவீரர் தின உரை முன்னிறுத்தும் செய்தி: இருவழிப் போரில் பிரவேசிக்க வேண்டிய காலம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 02 December 2007

சாதாரண மக்களிலிருந்து ராஜதந்திர வட்டாரங்கள் வரை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த புலிகளின் தலைவர் பிரபாகரனின் மாவீரர் தின உரை இடம்பெற்று சில தினங்கள் கடந்துவிட்ட நிலையில் அவ்வுரை முன்னிறுத்தியிருக்கும் சில விடயங்கள் குறித்து எனது அவதானத்தை கோடிட்டு காட்டுவதுதான் இந்த கட்டுரையின் நோக்கம்.

மேலும் படிக்க…
 
''மாவீரர் தின உரை குறித்து எழுந்திருக்கும் எதிர்பார்ப்புகள்'' அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 26 November 2007

nerudal_27novதமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போர் ஆரம்பமாகி 30 வருடங்கள் கடந்து விட்டன. கடந்த வருட மாவீரர் தின உரையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் கூறிய, சுதந்திர தேச உருவாக்கத்திற்கான விடுதலைப் போராட்டம் விரைவு படுத்தப்படுமென்கிற கருத்து நிலையானது இறுக்கமடைந்து அரசியல் வடிவம் பெறப் போகிறது.

மேலும் படிக்க…
 
மாவீரர் தின உரையில் இம்முறை பிரபாகரன் சொல்லப் போவதென்ன? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 26 November 2007

nerudal_27novதமிழீழ பிரகடனமா? போர் நிறுத்தத்திலிருந்து விலகும் அறிவிப்பாவென இலங்கையரசும் சர்வதேசமும் கிலி பிடித்துப் போயுள்ள நிலையில் அதற்கான விடையுடன் நாளை மறுதினம் வருகிறது விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்புமிக்க மாவீரர் தின உரை.

மேலும் படிக்க…
 
விடுதலைப் புலிகளின் தலைவரை குறிவைக்கும் சிங்கள வான்படை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 24 November 2007

யுத்த ஆய்வாளர் நிலவன் எழுதியது
nerudal_a32_2விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் மீதான சிறிலங்கா விமானப்படையினரின் வெற்றிகரமான தாக்குதலைத் தொடர்ந்து, புலம்பெயர்ந்த தமிழர்களை புதியதொரு அச்சமும், கவலையும் பிடித்துக்கொண்டுள்ளது.

மேலும் படிக்க…
 
போரில் விரைவான வெற்றி குறித்து மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை வளர்க்கும் அரசின் பிரசாரங்கள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 22 November 2007

nerudal_warஅரசாங்கத்தின் மீதும் விடுதலைப்புலிகள் மீதும் நெருக்குதலைக் கொடுக்கக்கூடிய அல்லது செல்வாக்கைச் செலுத்தக்கூடிய பலம்வாய்ந்த, உறுதியான சமாதான இயக்கமொன்று எம்மிடம் இல்லை. எமது எதிர்க்கட்சி ராஜபக்ஷ அரசாங்கத்தைவிட கூடுதலான அளவுக்கு போரில் நாட்டமுடையதாகத் தன்னைக் காட்டிக்கொள்வதற்கு முயற்சிக்கிறது. கடுமையான இனக்குரோதச் சூழ்நிலைகளின் கீழ் சிவில் சமூக இயக்கங்கள் மிகவும் பலவீன மடைந்தவையாகக் காணப்படுகின்றன.

மேலும் படிக்க…
 
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 1 - 15 / 406

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..