|
Monday, 10 October 2005 |
|
சிறிலங்காவின் ஐந்தாவது சனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு களத்தில் 13 வேட்பாளர்கள் போட்டியிடுவது இறுதியாகிவிட்டது. இதில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் மகிந்த ராஜபக்ஷ போட்டியிடுகிறார். அதாவது கடந்த பொதுத் தேர்தலுக்கு முன் ஜே.வி.பியுடனான உடன்பாடு ஏற்பட்டபின் கூட்டுச் சேர்ந்து உருவாக்கிய கட்சியின் சார்பில் அதன் சின்னமாகிய வெற்றிலைச் சின்னத்தில் அவர் போட்டியிடுகிறார். |
|
மேலும் படிக்க…
|
|
|
Monday, 10 October 2005 |
|
எமது தேசம் விடுதலை பெறுகிற போது, தேசத்தோடு சேர்ந்து எமது பெண்களும் விடுதலை பெற்றிருப்பார்கள் - போராளி ஜனனி
அக்டோபர் பத்தாம் திகதி மாலதி, நினைவு நாளும் தமிழீழ பெண்கள் எழுச்சி நாளும் ஆகும். இந்த நாளை நினைவு கொள்ளும் போது ஈழத் தமிழ்ப் பெண்கள் பற்றி பல்வேறு விடயங்களைப் பகிர்ந்து கொள்ள முடியும். |
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 09 October 2005 |
|
போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர் தமிழ் மக்கள் மீது இனவாத வெறித்தனத்துடன் சிறிலங்காப் படைத்தரப்பு நடாத்திய மனிதப்படுகொலை காஞ்சிரங்குடாப்படுகொலை. அது மீண்டுமொரு ஆண்டை நிறைவாக்கி இன்றைய தினம் நினைவு கூரவைத்துள்ளது. |
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 07 October 2005 |
|
சிறிலங்காவின் கிங்க் மேக்கர்களாக தமிழீழ விடுதலைப் புலிகள் இருக்கிறார்கள் என்று சர்வதேச செய்தி நிறுவனமான ஏ.எஃப்.பி. தெரிவித்துள்ளது.சிறிலங்கா அரச தலைவர் தேர்தல் தொடர்பாக ஏ.எஃப்.பி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரையில் இடம்பெற்றுள்ளவை:நவம்பர் 17 ஆம் திகதி நடைபெற உள்ள சிறிலங்கா அரச தலைவர் தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகளுடான முடங்கி நிற்கும் அமைதிப் பேச்சுக்கள் முக்கிய இடம் பிடித்துள்ளது.தேர்தலில் போட்டியிடும் இரண்டு பிரதான சிங்கள வேட்பாளர்களுக்குப் பின்னால் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தவிர சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் அணிசேர்ந்து விட்டன.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 05 October 2005 |
|
ஜுலை 7ம் நாள் இலண்டனில் நடந்த குண்டுத் தாக்குதல்களில் ஆனந்தசங்கரியின் மருமகள் சனுஜா பார்த்தசங்கரி கொல்லப்பட்டது, எமக்குத் தெரிந்த விடயம். இறுதிச் சடங்கில் பங்குபற்றுவதற்காக ஆனந்தசங்கரி இலண்டன் சென்றிருந்;தார். அவர் நேரம் கிடைத்தபோது சில பொது நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றினார். இலண்டன் சிங்கள மக்கள் சங்கமம் விடுத்த அழைப்பை ஏற்று சங்கரி மிகவும் வியப்ப+ட்டும் ஒரு பேருரையை வழங்கினார். தனது பேச்சை அவர் சிங்கள மொழியில் 'சகோதர சகோதரிகளே" என்று ஆரம்பித்து அரைமணி நேரத்திற்கு மேலாக அதே மொழியில் பேசினார். |
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 05 October 2005 |
|
அமைதி முயற்சிகள் ஆரோக்கியமான திசையில் நகர்வதற்கான அறிகுறிகள் சமிக்ஞைகள் தென்னிலங்கையிலிருந்து கிடைப்பனவாக இல்லை. யுத்தம் நிறுத்தப்பட்டு, போர் ஓய்ந்துள்ள தற்போதைய நிலையிலும் பாதுகாப்புத்துறைகளுக்கென முப்படையினர் மற்றும் பொலீஸாருக்கென இலங்கை அரசு ஒதுக்கீடு செய்துவரும் நிதியின் தொகை வருடாவருடம் கூடி வருகின்றது. |
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 05 October 2005 |
|
இனியாவது இந்தியா ஈழத்தமிழர்களை உணர்வுகளைப் புரிந்து கொள்ளுமா? தமிழ்த்தேசிய விடுதலைப்போராட்டத்தின் நகர்வுப் பாதை கடந்த காலங்களோடு ஒப்பிடுமிடத்து இன்னும் பலத்த சவால்களை சந்திக்கவுள்ளது. கடந்து வந்த 25 ஆண்டு காலப்பகுதியில் காலத்துக்குக் காலம் பல்வேறுபட்ட தடைகளை சந்தித்து அவற்றினை தகர்த்தெறிந்து வெற்றிப் பாதையில் பயணம் செய்ததை யாரும் மறுக்க முடியாது. ஆனால், இனிவரும் காலம் காத்திருக்கின்ற சவால்கள் மிகமிக கனதியானவை கடினமானவை. எனினும், இவற்றினை தகர்க்கமுடியாதென்றில்லை. ஆனால், முகங்கொடுக்கவேண்டிய முறையில் பல மாறுபாடுகளிற்கு இடமுண்டு. அந்த மாறுபாடுகளை எதிர்நோக்கும் போது சில புதிய அனுபவங்கள் ஏற்பட இடமுண்டு. |
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 05 October 2005 |
|
என் தாயே...என் தாயே... ஏன் என்னைக் கைது செய்தாய்...?பிரித்தானியாவிலிருந்து தாயகம் வந்த ஒரு தமிழனின் சோகக் கதை இலங்கையின் தலையிலுள்ள பல தீவுகளில் ஒரு தீவை பிறப்பிடமாக கொண்டவன் நான். அத் தீவின் பெயர் நாரந்தனை. இதுவே, இன்று என் சோகத்திற்கு காரணமாயிற்று. 10 வயது வரை எனது ஆரம்பக் கல்வியை நாரந்தனை றோமன் கத்தோலிக்க கலவன் பாடசாலையில் கற்றேன். அதன் பின்னர் எனது மேற்படிப்பிற்காக யாழ்ப்பாணத்திற்கு சென்றேன். அங்கே புனித பத்திரிசியார் கல்லூரியில் உயர்தரம் வரை கற்றேன். |
|
மேலும் படிக்க…
|
|
|
Tuesday, 04 October 2005 |
|
ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் செல்வதற்குத் தடை விதித்திருப்பதாக, ஐரோப்பிய ஒன்றியம் கடந்த வாரம் அறிவித்திருந்தது. அது மட்டுமல்லாது, விடுதலைப்புலிகளைப் பயங்கரவாத குழுக்களின் பட்டியலில் சேர்ப்பது குறித்தும், பின்னர் தீர்மானிக்கப் போவதாகவும் ஐரோப்பிய ஒன்ற்pயம் தெரிவித்துள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 02 October 2005 |
|
பலஸ்தீனத்திலும் தமிழர் தாயகத்திலும் இடம்பெற்ற திட்டமிட்ட குடியேற்றங்கள் * காசாவிலிருந்து யூதக்குடியேற்றங்கள் அகற்றப்பட்டதை முன்வைத்து ஒரு ஒப்பீடு உலக வரலாற்றில் தேசிய மக்களி னங்களை ஒடுக்குமுறைக்குள்ளாக்கி, இன அழிப்பினை மேற்கொண்ட, மேற் கொள்கின்ற அடக்குமுறை அரசுகள் பல, திட்டமிட்ட குடியேற்றங்களை அதற்கான கருவியாகக் கைக்கொண்டன. திட்டமிட்ட குடியேற்றங்களை மிக நுணுக்கமா கவும், பேரினவாதத்தின் தொலைநோக்கு நலன்களுக்குச் சாதகமாகவும் கையாண்ட அரசுகளில் இஸ்ரேலும் சிறிலங் காவும் முதன்மையானவை. இதன் மூலம் விடுதலைக்காக போராடும் மக்களின் சுயநிர்ணய உரிமையை வலுவிழக்கச் செய்வது அல்லது இல்லாமற் செய்வது இவர்களின் மூலதந்தி ரமாக இருந்தது. எனவே இதன் அடிப்படை சார்ந்து சில விடயங் களை முதலில் ஆராய்வது பொருத்தமானது. |
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 02 October 2005 |
|
ஸ்ரீலங்காவின் புலனாய்வு போர் வலையும் விலகிப் போகும் சமாதானமும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்தவரும் உதவிகளை கட்டுப்படுத்த ஸ்ரீலங்கா அரசாங்கம் இரண்டு முக்கிய வழிமுறைகளை கையாண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது இதன் ஒரு பகுதியாக விடுதலைப் புலிகளுக்கு கூடுதல் நிதி உதவிகள் கிடைப்பதாக கருதப்படும் ஐரோப்பிய நாடுகளிலும் கனடாவிலும் விடுதலைப்புலிகளுக்கு எதிரான பிரசார நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி நிதி ஆதாரங்களை தடை செய்வதற்கான திட்டம். இதற்கென சிங்கள தேசியவாதப் போக்குடையவர்களை கொண்டு விசேட குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
|
<< முதல் < முந்தைய 21 22 23 24 25 26 27 28 அடுத்த > கடைசி >>
|
| தேடியதில் கிடைதவை… 346 - 360 / 411 |