ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிக் கொண்டு வரும் நிலையில் உள் விவகாரங்கள் மற்றும் குத்து வெட்டுக்கள் என்பன மெல்ல அரங்கேறத் தொடங்கியுள்ளன. அரசியலில் அடுத்ததாக என்ன நடக்கப் போகின்றது என்ற பெரும் அங்கலாய்ப்புக்கு மத்தியில் மக்கள் காணப்படுகின்றனர்.
ஜனாதிபதித் தேர்தலின் பின்னணியில் ஒரு புறம் இனவாதம் கக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், சிறுபான்மை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் ஆதரவு யாருக்கு என்பதில் பெரும் எதிர்பார்ப்பு காணப்பட்டது.