|
மே மாதம் 8ம் நாள் நடைபெறவுள்ள தமிழக சட்டசபைக்கான தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணியை அமைத்துப் போட்டியிடவுள்ளது. மதிமுக தலைவர் திரு. வைகோ அவர்களிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கும் இடையே நடைபெற்ற பேச்சுக்களின் போது இந்த உடன்பாடு ஏற்பட்டது.
இன்று காலை 11.30 மணியளவில் தமிழக முதல்;வர் வைகோ அவர்களிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கும் இடையே போய்ஸ் தோட்ட இல்லத்தில் சந்திப்பு நடைபெற்றது. இதில் வைகோ அவர்களுடன் அதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன் அவர்களும் பங்கேற்றார். இந்தச் சந்திப்பின்போது மதிமுகவிற்கு 35 தொகுதிகளை ஒதுக்குவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்தைத் தொடர்ந்து இரு கட்சிகளிற்கிடையேயும் தேர்தல் உடன்பாடு கைச்சாத்திடப்பட்டது. நேற்று நடைபெற்ற திமுகவின் திருச்சி மாநாட்டில் 22 தொகுதிகள் மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதை அவர்கள் ஏற்றால் திமுக கூட்டணியில் தொடரலாம் என கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்றிரவு தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கும் திரு.வைகோ அவர்களிற்கும் இடையேயான சந்திப்பு இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் சந்திப்பு இன்று காலை நடைபெற்று இரு கட்சிகளிடையேயும் உடன்பாடு எட்டப்பட்டது. இதனையடுத்து தமிழக முதல்வர் ஜெயலிதாவும், மதிமுக தலைவர் வைகோ அவர்களும் ஊடகவியலாளர்களைச் சந்தித்தனர். இதன்போது தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்ததாவது: கடந்த காலத்தில் நடைபெற்ற குறித்த நாங்கள் எதனையும் நினைத்துப் பார்க்கவில்லை. எதிர்காலத்தை மட்டுமே கருத்தில் கொண்டுள்ளதாகவும், மதிமுகவுக்கும், அதிமுகவுக்கும் மிகப்பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது எனத் தெரிவித்தார். இக்கூட்டணி குறித்து வைகோ அவர்கள் தெரிவித்துள்ளதாவது: இந்தக் கூட்டணி மிக வலுவான, உறுதியான கூட்டணியாக அமையும். தமிழக மக்களிடையே இதற்கு மிகப் பெரிய வரவேற்புக் கிடைக்கும். பஅதிமுக வேட்பாளர்களின் வெற்றிக்காக மதிமுக தொண்டர்கள் முழு மனதுடனும், முழு வேகத்துடனும் சிறப்பாகச் செயற்படுவார்கள். அதேபோன்று மதிமுக வேட்பாளர்களின் வெற்றிக்காக அதிமுக தொண்டர் முழு வேகத்துடன் செயல்பட்டு வெற்றியைத் தேடித் தருவார். இரு கட்சிகளிடையே கடந்த காலங்களில் நடைபெற்ற சம்பவங்களை மறந்து எதிர்காலத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செயற்படுவோம். அதிமுக தனிப்பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியில் அமரும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். வைகோ அவர்கள் அதிமுகவுடன் கூட்டணியமைத்துள்ளது தொடர்பில் திருச்சியில் வைத்து கலைஞர் கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அதைப்பற்றி தான் ஒன்றும் சொல்வதற்கில்லை எனத் தெரிவித்ததுடன் மேற்கொண்டு செய்தியாளர்களின் கேள்விகளிற்கு பதிலளிக்க மறுத்து விட்டார். இதேவேளை மதிமுக - அதிமுக கூட்டணியமைக்கப்பட்ட செய்தியறிந்த இக்கட்சிகளின் தொண்டர்கள் ஒன்றாக இணைந்து பட்டாசுகளை வெடிக்க வைத்து கொண்டாடி வருகின்றனர நெருடல் இணையம்
|