பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

துரோகி கருணாவின் மறுபக்கம்- பாகம் 07 அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 09 April 2006
வீரத்தளபதி மேஜர் அன்ரனியின் வீரமும் வஞ்சகன் கருணாவின் வஞ்சனையும்.
தமிழீழத்தில் இயற்கையவள் அள்ளித்தந்த பச்சைவயல் வெளிகளும் அருவிகளும் அழகு சேர்க்கும் அம்பாறையின் கல்முனை தந்த தமிழ்வீரன் அவன் நல்ல திடகாத்திரமான ஆனழகன்,உயர்ந்த உருவம், ஊடுருவும் பார்வை, நிமிர்ந்தநடை, உச்சிமீது வானிருந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்ற மகாகவியின் பாடலைப்போல அவன் செயல்கள். சிலோன் சில்வஸ்ரார் என்றெல்லாம் அவனை அழைத்து கொண்டே போகலாம்.
அம்பாறையில் இப்படியெல்லாம் பெயர் சொல்ல ஓருவர் இருந்தான் என்றால் அவன் தான் மேஜர் அன்ரனி என்ற தமிழ்மறவன். தனது வீரத்தினை நிலை நாட்ட 1983ல் தமழீழவிடுதலைப்புலிகளில் தன்னை இனைத்து கொண்ட இவன் இந்தியாவில் 5 வது பயிற்சி முகாமில் தனது ஆயுதப்பயிற்சியை பெற்றுக்கொண்டான். பல முனைத்தாக்குதலில் அரசபடைக்கெதிராக ஈடுபட்ட அன்ரனி IPKF காலத்தில் அம்பாறைத் தளபதியாகச் செயல்பட்டான். அவ்வேளைகளில் IPKF யினருக்கு எதிரான பல தாக்குதல்களை முன்னின்று செய்தவன் இவனாகும்.

தேசியத்தலைவர் மீது மேஜர் அன்ரனி வைத்திருந்த நம்பிக்கையும் விசுவாசத்திற்கும் ஒரு எடுத்துக்காட்டுச் சம்பவத்தை முன்வைக்கிறேன். அதாவது IPKF காலமது வன்னிக்காட்டிக்கு தேசியத்தலைவரைச் சந்திக்க அன்ரனி செல்கின்றான். அவ்வேளை கருணாவும் வன்னியில் நிற்கிறான். அன்ரனிக்கு நன்கு பழக்கமான போராளி ஒருவர் அன்ரனியிடம் கேட்கிறார்!

ஏன் அன்ரனி வன்னியில் IPKF ற்கு எதிராக நாம் சன்டையிடுவதைப்போல மட்டக்களப்பில் உள்ளவர்களால் சன்டை செய்யமுடியவில்லை!

என்ன காரணம்?

அதற்கு அன்ரனி புன்முறுவலுடன் அந்த போராளிக்கு ஒரு உதாரணக் கதையைக் கூறுகின்றான். அதாவது காட்டில் வேட்டை நாய் ஒன்று காட்டு முயலொன்றை துரத்துகிறது. முயல் ஒடிக்கொண்டேயிருக்கிறது.

கொஞ்சநேரத்தில் ஒரு புளியமரத்தின் கீழ் ஒடி நின்ற முயல் மீண்டும் புது வீரத்துடன் வேட்டை நாயை விரட்டுகின்றது. இதை எதிர்பார்க்காத வேட்டை நாய் பயத்தினால் திரும்பி ஓட்டம் பிடித்தது.

ஏனனில் முயலுக்கு வீரம் வந்த அந்த புளியமரத்தில் தானாம் வீரபாண்டியன் கட்டப்பொம்மனை ஆங்கிலேயர் துக்கிலிட்டனராம் அதனால் தானாம் அந்த முயலுக்கு வீரம் வந்தாம்.

ஏனனில் தேசியத்தலைவரின் அரவனைப்பிலும் நேரடிக்கண்காணிப்பிலும் உள்ளவர்களுக்கு ஒரு தனித்துவமான திறமையும் வீரமும் அங்கு ஊட்டப்படுகிறது மட்டுமல்ல நிழழாக அவர்களைப்படர்கிறது என்றே சொல்ல்லாம். அதன் பிரதிபலிப்புத்தான் வன்னிக்காட்டியில் IPKF யினர் வாங்கிய அடி!

இச்சம்பவத்தை மேஜர் அன்ரனி நாசுக்காக சுவாரசியமாக வேட்டைநாய் முயல் கதையாக அந்த போராளியிடத்தில் எடுத்துதம்பினான்.  இந்த நிகழ்வால் ஒன்றை புரிந்து கொள்ளாலாம் தேசியத்தலைவரிடத்தில் அன்ரனி வைத்திருந்த விசுவாத்தையும் தலமையிடத்தில் அவனுகிருந்த நம்பிக்கைக்கும் இது ஒரு எடுத்துகாட்டாகும்.

அன்ரனிக்கு ஏற்கனவே பிஸ்டல் பழக்கப்பட்டது தான். ஆனாலும் அதில் பெரியளவு தேர்ச்சி பெற்றவனல்ல! தலைவரை அன்ரனி சந்திக்க சென்ற வேளையில் அவர் அன்ரனியையழைத்து பிஸ்டலால் இலக்கொன்றைச் சுடச் சொன்னார்.

தலைவருக்கு முன்னால் இலக்கைச் சுடுவதற்கு தயங்கி நின்ற அன்ரனியை அவர் அழைத்து தைரியம் ஊட்டி சுடக்கூறினார்.

அன்ரனிக்கு திரும்ப திரும்ப தலைவர் ஊக்கம் கொடுத்தார். இதனால் அந்த ஊக்குவிப்பால் அன்ரனியும் பிஸ்டலால் குறிபார்த்துச்சுடுவதலில் திறமையுள்ள வல்லுனரான தளபதியாகிவிட்டான்.

இச்சம்பவத்தை நேடியாக நோக்கிய கருணாவுக்கு அன்ரனி மீது பொறாமையும், வெறுப்பும் உண்டாகின. இவ்வேளையில் முல்லைத்தீவிப் பகுதில் IPKFனரின் முகாம் ஒன்றின் மீது தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது.

இச்சம்பத்தில் எறிகனைத்தாக்குலில் ஈடுபட்டு தாக்குலை சிறப்பாக வெற்றியடையச் செய்து அன்ரனி துனைபுரிந்தான். இதனால் தேசியத்தலைவரிடத்தில் அன்ரனி பாராட்டையும் பெற்றான்.

இக்கால கட்டத்தில் பயிற்சிப்பாசறை ஒன்றில் சகபோராளிகளுக்கு திறமையாக இராணுவப்பயிற்சியை அன்ரனி வழங்கினான்.

இதை நேரடியாக உற்று நேக்கிக்கொண்டியிருந்த கேணல் கிட்டு அன்ரனியை மிகவும் பாராட்டி ஒரு திறமைமிற்க கொமாண்டர் என்று தேசியத்தலைவருக்கு சிபார்சு செய்தார். இவ்வேளையித்தான் அன்ரனிக்கு தலைவர் M 203 ரைபிள் லேஞ்சர் வழங்கினார்.

தேசியத்தலைவராலும் முதி நிலைத்தளபதியாலும் சகபோராளிகளாலும் திறமையக பாராட்டப்பெற்ற அன்ரனியை நினைத்த துரோகி கருனாவின் உள்ளம் வஞ்சகத்தால் வேகமாகத் துடிப்பு கொண்டது. அந்த துரோகின் உள்ளமதில் ஆயிரம் கேள்விகள் துளைபோட்டன! அன்ரனி என்னை மிஞ்சி விடுவானோ?

எனது மதிப்பு இனிவரும்காலங்களில் குறைந்து விடுமா?

சீ!சீ! அப்படி நடக்காது! நடக்கவும் விடமாட்டேன் அந்த ஆயிரம் கேள்விகளுக்கும் உடன் விடை தெரியாமல் புனிதபுமி முகாமிலிருந்த உளுவிந்த மரமொன்றை தலையை பிய்த்தபடி பலதடவை கருணா என்ற அந்தக்காட்டு பன்றி வலம் வந்தது. இருப்பினும் அந்த பன்றின் மனம் குறிப்பெடுத்து கொண்டது. அன்ரனியை எப்படி ஓரம்கட்டி வீழ்த்தி பழிதீர்க்கலமென்று...!

தொடரும்...



A.M.T.KUDDY
Comments (3) >>

a guest said:

 
:grin
April 09, 2006

Pirapathesan, Batticaloa. said:

 
கிழக்கு மண் ஈன்ற வீர மறவர்களில் இவனும் ஒருவன். அம்பாறை மாவட்ட தளபதியாக இவன் இருந்த போது கருணாவின் வஞ்சணையாலேயே இம் மாவீரன் வட தமிழீழம் சென்றவேளையில் வீரச்சாவடைய நேரிட்டது. தமிழீழ ஆயுதப்போராட்டம் ஆரம்பிக்கும் முன்னரே சிறீலங்கா இராணுவத்தை இவனது தந்தை துப்பாக்கியால் தாக்கி துரத்தியடித்தவர் (துறைநீலாவணையில்) மேஜர் அன்ரனி வீரப்புலிக்குப் பிறந்த வீரப்புலி. பிரபாதேசன் (மட்டக்களப்பு)
April 09, 2006

a guest said:

 
:grin :grin :grin :grin :grin :grin :grin :grin :grin :x :x
April 14, 2006
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..