பிரதான பக்கம் arrow Karuna Matter arrow துரோகி கருணாவின் மறுபக்கம்- பாகம் 08
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

துரோகி கருணாவின் மறுபக்கம்- பாகம் 08 அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 16 April 2006

...மீண்டும் அம்பாறைக்கு பயணமான அன்ரனி அங்கு வன்னியில் தலைவரிடத்தில் தான் பெற்ற அனுபத்தையும் நேரடியாக தலைவரிடத்தில் பெற்ற பிஸ்டல் பயிற்சியையும் கூறி தற்போது தான் பிஸ்டல் சுடுவதில் அனுபம் பெற்று விட்டேன் என்றும் குறிதவறாமல் இலக்கு ஒன்றை சுட்டும் காட்டினான்.

அம்பாறையில் ;IPKFயினருக்கும் தமிழ்தேசவிரோதக்கும்பலுக்கு எதிராக தாக்குதலலை துரிதப்படுத்தப்போவதாக சக போராளிகளிடத்தில் அன்ரனி எடுத்துக் கூறினான். இக்கூற்றுக்கமைய 1989ல் அம்பாறை மல்வத்தையில் IPKF யினர் மீது தாக்குதல் ஒன்றை அன்ரனி முன்னெடுத்து செய்தான். இதில் IPKF யினரைக் கொண்டு04 றைபிள்களும் கைப்பற்றினான்.

முன்னால் இலங்கை ஜனாதிபதி ரனசிங்க பிறேமதாசாவின் ஒப்பந்தக் காலப்பகுதில் IPKF யினர் முதலில் அம்பாறையை விட்டு வெளியேறிக் கொண்டியிருந்தனர். அக்காலப்பகுதியில் தமிழ் தேசவிரோதக்குழுக்கள் அம்பாறை திருக்கோவிலிலும், தம்பிலுவிலிலும் இரண்டு பெரிய முகாம்கள் அமைத்திருந்தனர்.

அந்த இரண்டு முகாம்களையும் அன்ரனி வேவு பார்த்தான். வேவு எல்லாம் புர்த்தியாகி விட்டது. மட்டக்களப்பிலிருந்து மேலதிக போராளிகளை அம்பாறைக்கு அனுப்பி வைக்கும்மாறு கருணாவிடம் அன்ரனி கோட்டான். மற்றைய போராளிகளுடன் கருணாவும் சென்றான். இரண்டு தமிழ்த்தேசவிரோத முகாம்களையழிக்க தலைமை தாங்கி அன்ரனி களத்தில் இறங்கினான்.

இந்த இரு முகாம் சன்டையில் வெகுதுரத்தில் நின்று கொண்டு அன்ரனி எங்கு நிற்கிறாய்! என்று கருணா கேட்டான். அதற்கு அன்ரனி சன்டை நடக்கும் முகாமுக்குள்தான் நிற்கிறேன். கருணா உனக்கு பிரச்சனையில்லையா என்று அன்ரனி வேடிக்கையாக வோக்கி டோக்கில் கேட்டான். கருணா வெட்கத்தால் மௌனமானான்.

இச்சன்டையில் தனிப்பட்டரீதியில் கருணா முடிவெடுத்து சரணடைந்த சில தமிழ் தேச விரோதக் குழுக்களைச்சேர்ந்தவர்களை சுட்டுக் கொன்றான்.அன்ரனி இச்சம்பவத்தை கடுமையாக எதிர்த்தான். சன்டையில் அவர்கள் இறந்ததாக கருணா கதைபரப்பினான்.
இந்த முகாம்கள் அழிப்பில் கைப்பற்றப்பட்ட ஆயத தளபாடங்களை எடுத்துக் கொண்டு செல்லும் போது TNA என்றழைக்கப்பட்ட தமிழ்தேசவிரோதக்குழுக்கள் பதுங்கித்தாக்குலை செய்தனர்.

இச்சம்பவத்தில் கருணா பின்வாங்கி ஓடிவிட்டான். பதில் தாக்குதல் செய்து முறியடித்து தமிழ்தேசவிரோதிகளை பின்வாங்கச் செய்து விட்டு வெற்றிகரமாக ஆயுத தளபாடங்களை அன்ரனி முகாமுக்கு கொண்டு சேர்த்தான். இதில் TNA என்றழைக்கப்பட்ட ராசிக்குழுவினர் நிலை குலைந்தனர். அன்ரனி மீது சகபோராளிகளிடத்தில் மதிப்பும் மரியாதையும் உயர்ந்தது சகபோராளிகள் அன்ரனியை அன்ரனிக்குயின் என்று பெயர் வைத்து அழைத்தனர். ஆனால் இச்சன்டையை தான் தான் முன் நின்று நடத்தி வெற்றி பெற்றதாக கருணா பெயர் வாங்கினான்.மட்டக்களப்பிலிருந்து IPKF யினர் கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொண்டார்கள்.

அம்பாறையில் பின்னடைவைக் கண்ட ராசிக்குழுவினர் மட்டக்களப்பு வடக்கே சத்துரக்கொண்டான் தொடக்கம் கல்லடிப்பாலம்வரை கட்டுப்பாட்டுக்குள்ளாக்கி முகாம்களை அமைத்திருந்தனர். அன்ரனியின் செல்லவாக்கைச்சரியச் செய்ய இதுதான் தருனம் என கனவு கண்ட கருணா தனது படையணியை இறக்கி தன்னாமுனை வரை நகர்த்தினான் ஆனால் சத்துருக்கொண்டானில் ராசிக் குழுவினர் கடுமையான எதிர்ப்பிருந்தது. தன்னாமுனைக்கு மேல் நகரமுடியாமல்  கருணாவின் படையணி திண்டாடியது. படுவான்கரைப்பிரதேசங்களான வவுனதீவு, உன்னிச்சை, ஆயித்தியமலை, மகிழவெட்டுவான் என்பன ராசிக்குழுவினரின் கட்டுப்பாட்டுக்குள்ளிருந்த பிரதேசங்களாகும்.

அந்த TNA யின் ராசிக்குழுவினர் நரிப்புல்தோட்டம் வழியாக பங்குடாவெளி வந்து ஏறாவுர் வர முயற்சி எடுத்துக்கொண்டிருந்தனர். இந்த நகரைத் தக்கவைக்க பங்குடாவெளியில் மதியை கருணா நியமித்தான்(கிரானில் முதல் படுகொலையை கருனாவுடன் சேர்ந்து செய்த மதி) சகபோராளிகளுகுத் தெரியாமல்அவர்களை விட்டு விட்டு மதி தப்பியொடி விட்டான்.

அவ்வேளையில் கருணா தனது மெய்க்காப்பாளர்களுடனும் சில போராகளிகளுடனும் கொம்மாதுறையில் தளமிட்டிருந்தான். பங்குகுடாவெளியில் ராசிக்குழுவினர் வருவதையறிந்த கருணா தனது மெய்க்காப்பாளர்களை அழைத்துக் கொண்டு தனது சொந்தக் கிராமமான கிரானுக்குத் தப்பிச்சென்று விட்டான். பங்குடாவெளி வரை வந்த  ராசிக்குழுவினரை மேஜர் அபயனும் ரம்போ பிரசாத்தும் சகபோராளிகளுடன் சேர்ந்து மிக துனிச்சலுடன் கொஞ்ச நிமிடத்திற்குள்  பதில் தாக்குதல் செய்து முறியடித்து பின்வாங்க செய்தனர்.

பங்குடாவெளி வந்த ராசிக்குழுவினர் நரிப்புல்தோட்டம் வரை பின்நோக்கி ஒடி விட்டனர். ராசிக்குழுவினர் பின்வாங்கிய செய்தியை மேஜர் அபயனும் ரம்போ பிரசாத்தும் கருணாவுக்கு அறிவித்தனார். நீங்கள் கூறுவது உண்மையா எனக் கேட்ட கருணா அதை உறுதிப்படுத்திய பின்னர் மீண்டும் கொம்மாதுறைக்கு வந்து சேர்ந்தான்.

தெல்லிப்பளையை சேர்ந்த மேஜர் அபயனுக்கும் ரம்போ பிரசாத்திற்கும் கருணா செய்த துரோகங்கள் என்ன என்னென்று இத்தொடரில் பின்னர் உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். இது இவ்வாறு இருக்க இரண்டு நாட்களாகியும் தான்னாமுனையிருந்து கருனாவின் படையனியால் முன்னேற முடியவில்லை! மட்டுநகரை ஏன் உங்களால் இன்னுமும் பிடிக்க முடியவில்லை! என்ன காரணம்? என்று தலைவர் கருணாவுடன் தொடர்பு கொண்டு கேட்டார். கருணாவுக்கு இது பெருத்த அவமானமாகயிருந்தது. இதில் சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்களையும் தளபதிகளையும் பலமைல்களுக்கு அப்பாலிருந்து கொண்டே தொலைத்தொடர்பில் தொடர்பு கொண்டு கருணா காரணம் கேட்டானான். ஆதற்கு அவர்கள் அன்ரனி இருந்திருந்தால் எப்போதே பிடித்திருப்போம் என்றும் அன்ரனி இங்கு வரவேண்டும் என்றும் எல்லோரும் விரும்பினர்.

அந்நேரம் தலைவர் தன்னை பிழையாக விளங்கிகொள்வார் என நினைத்த கருணா அன்ரனியை அம்பாறையிருந்து உடன் வரும்படி அறிவித்தான். அன்ரனி என்ற வீரத்தளபதி வருகின்றான் என்பதை அறிந்து கொண்ட ராசிக்குழுவினர் கொஞ்சம் கொஞ்சமாக தங்களது முட்டை முடிச்சுகளைக்கட்டி மட்டுநகரை விட்டு ஒடத் தொடங்கினர். அன்ரனியால் முற்றுமுழுதாக மட்டு நகர் மீட்கப்பட்டது.ஆனால் மட்டு நகரை தான் வெற்றிகொண்டு மீட்டதாக கருணா கதையளந்தான்.

பளுகாமத்தில் ராசிக்குழுவினரின் முகாமைத் தாக்கும் போது கொக்கட்டிச்சோலையிருந்து சக ராசிக்குழுவினரின் உதவி கிடைக்கும் என்று கொக்கட்டிச்சோலை அம்பலத்தடியில் மேஜர் றோபேட் தலைமையில் கட்அவுட் போடப்பட்டது. இவ்வேளையில் குறுமன்வெளியைச்சேர்ந்த தாசன் என்ற போராளி ராசிக்குழுவின் முகாமைப்பார்க்கச் சென்றார். ராசிக்குழுவினர் ஆயுததளபாடங்களை வாகனங்களில் ஏற்றி வைத்துவிட்டு ஏற்கனவே தப்பி சென்று விட்டனர்.தாசன் கைக்குண்டு ஒன்றை வெடிக்க வைத்து விட்;டு ஆயுதங்களை வாகனத்தில் கொன்டு வந்து சேர்த்தான்.இதை வெகுதெலையிருந்து அவாதனித்த கருணா ராசிக்குழுவின் முகாமை தகர்த்து பெருமளவு கனரக ஆயுதங்களை தான் கைப்பற்றியதாக எல்லாருக்கும் பிரச்சாரம் செய்தான். ஆனால் இந்த தாசனுக்கு கருணவால் செய்யப்பட்ட கொடுமைகள் பல.. பல  இந்த தாசன் தற்போது எங்கு எந்த நிலையில் வாழ்கின்றான் என்று தெரியாது!

ராசிக்குழுவினரின் பளுகாமம் முகாம் கைப்பற்றப்பட்டு செய்தி கேட்டு மற்றய TNA யினர் முன்னேறி வந்தனர். 1989ல் இச் சம்பவம் நடந்தது மேஜர் றேபேட்டுடன் 6 போராளிகளும் பரந்த வெளியில் பகலில் ராசிக்குழுவினருடன் எதிர்ச்சமரில் ஈடுபட்டியிருந்தனர். அப்போது அவர்களின் ரவை முடிந்து விட்டது. கருணாவிடம் உதவியும் ரவையும் கேட்டனர். கருணா பதில் கூறவில்லை! இறுதிவரை போராடினோம் ரவை முடிந்து விட்டது! ஆனால் சரணடையமாட்டேம் என்று இறுதியாக தொலைத்தொடர்பு சாதனத்தில் பேசி சயனைட் அருந்தி மேஜர் றோபேட் மற்றும் கொம்மாதுறையைச் சேர்ந்த வேனு உட்பட 6 போராளிகள் வீரச்சாவடைந்தனர். இதே நேரம் 3 கிலோ மீற்றருக்குள் 300 பேருடன் கருணா என்ற நயவஞ்சகன் இருந்தான் என்பது குறிப்பிடதக்க விடயம்.

ஆனால் அந்த 6 மாவீரர்களின் புகழுடலைக்கூட கருணாவால் எடுக்க முடியவில்லை! மாறாக மேஜர் அபயனனையும் தாசனையும் வீண் பழிசுமத்தினான் கருனா! இதனால் மனமுடைந்த தாசன் இயக்கத்தை விட்டே வெளியேறினான். இச்செய்தியை அறிந்த அன்ரனி அம்பாறையிருந்து வந்து சேர்ந்தான். தொடரும் …...வாழ்க தமிழ்த் தேசியம்.அன்புடன் ஜரோப்பாவிலிருந்து A.M.T.KUDDY

 

 

 


A.M.T.KUDDY
Comments (8) >>

Neelan said:

 
:eek
April 16, 2006

batti piraba said:

 
அட கருணா இப்படியும் சாதனை செய்துள்ளாயா?துரோகி நீ நாசமாய் போவாய்:upset :zzz
April 16, 2006

Prapathesan Batticaloa said:

 
மேஜர் அபயன் அண்ணன் ஒரு உன்னதமான போராளி யாழ் தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகக்கொண் வர். எக் காலத்திலும் அசைவ உணவு உண்ணாத இவர் எங்களுக்கு மான் மரை சுட்டு; உடும்பு முயல் பிடித்து தானே சமைத்து தந்தவர். மட்டு கரவெட்டிக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் நவாசும் இவரும் வீரச்சாவடைந்தனர். தேசத்துரோகிகளும் சிங்கள ஈனப்படையும் அண்ணன் அபயனின் தலையை வெட்டிச் சென்றனர். இந் நிகழ்வுக்கு தலைமை வகித்து வந்தவன் புளொட் மோகன் என்ற தேசத்துரோகி இந்த இடத்தை தற்போது கைப்பற்றியிருக்கம் அசீமான்தான் கருணா என்ற ஈனப்பிறவி.கொழும்பு வீதியில் புல்லுருவி மோகன் கிடந்தது போல் கருநா கத்துக்கும் வரும் நாள் தொலைவில் இல்லை. குறுமண்வெளியைச் சேர்ந்த முன்னால் போராளி தாசன் (சொந்தப் பெயரை குறிப்பிட விரும்பவில்லை) 1990 இல் இயக்கத்தில் இருந்து கலைக்கப்பட்டான். சண்டைக்களத்தில் இவனுக்கு நிகர் இவனே.துணிவுக்கு மறு பெயர் தாசன். 1990க்குப் பின் இவன் மத்திய கிழக்கு நாடோன்றுக்கு சென்று பின் மலையகப் பிள்ளையொன்றை திருமணம் செய்து மலையகத்தில் சந்தோசமாக வாழ்ந்து வருகின்றான். பிரபாதேசன் (மட்டக்களப்பு)
April 16, 2006

thilip said:

 
கருனாவை எனக்கு பல காலம் தொயும் அவன் எங்களையும் கொமடுமை படுத்தியதையும் எழுதுங்கள் பாதர் ரெமேஸ் சித்தா நான் இப்படி பல பேர்நாசமாய் போனது இவனால்தான் அக்காலப் பகுதியில் நடந்த விபரங்களையும் எழுதுங்கள்ள்.நன்றி முன்னால் மட்டு புலனாய்வுப்பொறுப்&#-7506;ªாளர் தீலிப்
April 16, 2006

Nisanthan said:

 
திலிப் அண்ணன் நீங்கள் வெளியில் வராமல் இருந்திருந்தால் உங்களையும் இத் துரோகி அழித்திருப்பான். எமது நீலனுக்கு நடந்த கதியை எண்ணிப் பாருங்கள். உங்களுடன் தொடர்பு கொள்ள மிகவும் ஆவலாய் உள்ளேன்.

நிசாந்தன் ( ஆரையம்பதி )
April 17, 2006

kajan said:

 
தீலிப் நீங்கள் இந்திய உளவுப்பிரிவுடன் தொடர்புடன் இருப்பதாக கருணா சொன்னான்.உன்னமயா என்பது எமக்கு தொரியாது.தேசியத்தை தொடர்பு கெர்ண்டு உங்களது உண்மையான நிலைமையை தெரீயப்படுத்துங்கள&#-7505;.உங்களுடனும் சித்தா ரெமேஸ் போன்றறேருடன் கருணா வெளிநாடு வந்த போது தொடர்பு கொண்டதாக அறிந்தோம்.ரெமேஸ் சித்தா போன்றவர்கள் பல ஆயிரம் வெளிநாட்டு பணத்தினை கருணாவுக்கு பெற்று கொடுத்தாகவும் அறிந்தோம்.கருணா உங்களுக்கு செய்த துரேகத்தை மறந்து எப்படி நீங்கள் இவ்வாறு செய்தீர்கள் தேசியம் உங்களை கருணாவுடன் தொடர்பு என ஓரு போதும் என்னாது காரணம் என்றும் தலைவரையும் தமிழர் விடுதலையும் விளங்கி கொண்டவர்கள் என்தற்காக.உங்களை போன்றவர்கள் கருணாவின் திருவிளையாடல்களை புலம்பெயர் வாழ் மட்டக்களப்பு மக்களுக்கு விளங்கப்படுத்துவதே நீங்கள் செய்யும் சிறந்த பணியாகும்.அன்புடன் கஜன் மட்டக்களப்பு
April 17, 2006

kate said:

 
null
April 17, 2006

GUY said:

 
:grin :upset :x IT,S VERY INTREST STORY,S
April 20, 2006
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..