பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

சாவகச்சேரி கொடூரப் படுகொலைக்கு பழி வாங்கியே தீருவோம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 18 April 2006

சாவகச்சேரியில் சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய கொடூரப் படுகொலைக்கு பழி வாங்கியே தீருவோம் என்று யாழ். பொங்கியெழும் மக்கள் படை எச்சரிக்கை விடுத்துள்ளது.யாழ். மாவட்ட பொங்கியெழும் மக்கள் படை வெளியிட்டுள்ள அறிக்கை:

சாவகச்சேரி கனகம்புளியடிக்கு இடைப்பட்ட தபால் நிலைய வீதிப் பகுதியில் மிகவும் திட்டமிட்ட வகையில் 17.04.2006 அன்று இராணுவத்தினரின் அதிகண்காணிப்புப் பிரதேசத்தில் இராணுவத்தினரால் வெடிபொருள் பொருத்தி வைக்கப்பட்டு மிகவும் கொடூரமான முறையில் அப்பாவி பொதுமக்கள் மீது திட்டமிட்ட வகையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக இளைஞர்களே குறிவைத்து தாக்கப்பட்டுள்ளனர்.

உயிர் இழப்புக்களையும், குழப்பத்தையும், அச்சத்தையும் தோற்றுவிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலின் நோக்கம் மக்களை அச்சுறுத்தி அடிபணிய வைப்பதேயாகும்.

இத்தாக்குதலில் இருவர் பரிதாபகரமாக கொல்லப்பட்டதோடு மேலும் இருவர் படுகாயமுற்றுள்ளனர்.

இதற்கு எமது வன்மையான கண்டனத்தை தெரிவிக்கின்றோம்.

இவ்வாறான கொடூர முகம்கொண்ட சிங்கள பேரினவாத படைகளுக்கு எதிராக பழிக்குப்பழி எமது பதில் தாக்குதல்கள் தொடர்ந்தே தீரும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..