|
ஜெயதேவனின் தலைமறைவு வாழ்க்கை ஆரம்பம் |
|
|
|
Wednesday, 19 April 2006 |
|
லண்டனில் தொழில் கட்சியுடன் தொடர்புகள் இருப்பதாக பலபேரை லண்டனிலும் தாயகத்திலும் ஏமாற்றிவந்த ஜெயதேவன் தனது சொந்த வீட்டில் இருந்து வெளியேறி தலைமறைவாகவும், இடம்மாறியும் வாழவேண்டிய நிலை தற்போது உருவாகியுள்ளது. லண்டனில் பலகாலமாக பெரிகாடினரின் என்ற பாராளுமன்ற உறுப்பினரின் தொகுதிக்குள் வாழ்ந்துவந்த ஜெயதேவன் கோவில் பணமோசடி காரணமாக பிரித்தானிய பிரதமர் ரொனிபிளேயருக்கு தமிழ் ஆர்வலர் சிலர் முறையிட்டதால், பிரித்தானிய உளவுத்துறையினரால் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். குறித்த பிரதேச பாராளுமன்ற உறுப்பினரான பெரிகாடினரும் தற்போது இவரை கைவிட்டுள்ள நிலையில் தனது இருப்பிடத்தை தற்போது பானெட் பவுன்சில் பகுதிக்கு மாற்றியுள்ளார்.
தான் தனது சொந்த இடத்தை இடமாற்றுவதன் மூலம் கடந்த 8 வருடமாக பிரித்தானிய அரசியல்வாதிகளை சாட்டி தாம் செய்த மோசடிகளில் இருந்து தப்பிகொள்ள முடியும் என்றும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் பெரிகாடினரினருடன் இணைந்து மேற்கொண்ட மோசடிகளில் இருந்து தப்ப முடியும் என்றும் இவர் கருதுவதாக அறியமுடிகிறது. எதிர்வரும் வாரமளவில் பிரித்தானிய தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஜெயதேவனின் கோவில் கம்பனி உள்ள இடத்தில் பாரிய மக்கள் ஆர்பாட்டம் நடாத்துவதற்கு முன்னைநாள் வானொலி ஒண்றின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் ராஜன் ஈடுபட்டு வருவதாக அறியமுடிகிறது nitharsanam
|