|
தாக்குதலை தடுத்து நிறுத்த இந்திய அரசு தலையிட வேண்டும் |
|
|
|
Thursday, 18 May 2006 |
|
இலங்கையில் தமிழ் மக்கள் மீது இராணுவத்தினர் நடத்தி வரும் தாக்குதல்களை தடுத்து நிறுத்த உடனடியாக இந்தியா தலையிட வேண்டுமென வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தியுள்ளது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் நடைபெற்ற போது பல்வேறு தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. அதிலேயே தமிழ் மக்கள் மீதான இராணுவத் தாக்குதல்களை தடுத்து நிறுத்த இந்தியா தலையிட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இலங்கையில் தமிழர்கள் மீது இராணுவத்தினர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் படுகொலைகள்,தாக்குதல்கள் தொடர்பாக இக்கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்ட இலங்கை இராணுவத்தின் இவ்வாறான செயல்களுக்கு கடுமையான கண்டனமும் தெரிவிக்கப்பட்டது
நெருடல் இணையம்
|