பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள் arrow விடுதலைப் புலிகளின் கடல் இறைமை : இந்தியா கருத்து
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

விடுதலைப் புலிகளின் கடல் இறைமை : இந்தியா கருத்து அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 18 May 2006

தமிழீழ விடுதலைப் புலிகளின் கடல் இறைமை பற்றிய அறிவிப்பி குறித்து எமக்கு கருத்து எதுவும் இல்லை- அது இலங்கையின் உள்நாட்டு விவகாரம் என்று இந்திய கடற்படை தளபதி அட்மிரல் அருண் பிரகாஸ் தெரிவித்துள்ளார்.இது குறித்து அருண் பிரகாஸ் கூறியுள்ளதாவது:

இலங்கை நிலைமைகள் மோசமடைந்துள்ளதால் அண்டைய நட்பு நாடு என்கிற வகையில் நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இலங்கை வன்முறைகள் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

சிறிலங்காவுடனான கடற்படை உறவு நல்ல முறையில் உள்ளது. தமிழ்நாட்டுக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடல்வழி ஊடுருவல் இல்லை. அகதிகள் மட்டுமே வருகின்றனர்.

தமிழ்நாட்டு மீனவர்கள் பாதுகாப்புக்கு நாம் முன்னுரிமை கொடுத்து வருகிறோம். சிறிலங்காவின் கடல் எல்லைக்குள் நுழைய வேண்டாம் என்று நாம் தமிழ்நாட்டு மீனவர்களைக் கேட்டுகொண்டுள்ளோம்.

சில நேரங்களில் கடல் எல்லைகளைத் தாண்டிச் செல்லும் மீனவர்களைத் துன்புறுத்த வேண்டாம் என்றும் சிறிலங்கா கடற்படையினருக்கு நாம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

விடுதலைப் புலிகள் கடல் இறைமை உரிமை பற்றி கூறியுள்ளது சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரம். அதில் எமக்கு கருத்து ஏதும் இல்லை.

இந்திய கடற்படையானது இறைமையுள்ள அரசாங்கத்துடன் தான் தொடர்புகளை மேற்கொள்ளும். அரச சார்பற்ற சக்திகளுடன் தொடர்பு கொள்ளாது என்றார் அவர்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..