|
மட்டக்களப்பு ஈ.பி.டி.பி ஒட்டுப்படையின் முகாமில் குண்டு வெடிப்பு |
|
|
|
Thursday, 01 June 2006 |
|
இன்று காலை 5.45 மணிக்கு மட்டக்களப்பு கோவிந்தன் வீதியிலுள்ள ஈபிடிபி ஒட்டுப்படை யின் முகாமினுள் நேரம் குறித்து வெடிக்கும் குண்டு ஒன்று வெடித்ததில் ஒருவர் படுகாய மடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கந்தையா அருமைலிங்கம் என்பவரே படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிற்சைப்பிரிவுக்கு உற்படுத்தப்பட்டு பின்னர் விசேட சிகிச்சைக்காக அவசரமாக உலங்குவானூர்தி மூலம் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மேற்படி நபர் ஈ.பி.டி.பி. யினரால் நடாத்தப்படும் தமிழ் விரோத வானொலி நிகழ்ச்சியான "இதயவீணை" நிகழ்ச்சியில் மட்டக்களப்பில் இருந்து போடியார் எனும் பெயரில் நிகழ்வுகளில் பங்கு பற்றுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நெருடல் இணையம்
|