|
புலிகளின் உயர்குழு ஞாயிறன்று ஒஸ்லோ நோக்கிப் புறப்படுகிறது. |
|
|
|
Friday, 02 June 2006 |
|
அடுத்த 8, 9 ஆம் திகதிகளில் நோர்வேத் தலைநகர் ஒஸ்லோவில் நடைபெறவிருக்கும் சந்திப்பில் கலந்துகொள்வதற்காக விடுதலைப் புலிகளின் உயர்மட்டக் குழு நாளை மறுதினம் ஞாயிற்றுக் கிழமை கிளிநொச்சியிலிருந்து கட்டுநாயக்கா வழியாக நோர்வே புறப்படும் எனக் கொழும்பில் நேற்று தகவல்கள் வெளியாகின. விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன், காவல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன், புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன், மொழி பெயர்ப் பாளர் ஜோர்ஜ் ஆகியோர் உட்பட புலிகளின் அணி ஒன்று நாளை மறுதினம் நோர்வே புறப்படுவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன
எனவும் போக்குவரத்து ஒழுங்குகளை கொழும்பில் உள்ள நோர்வேத் தூதரகம் செய்துவருவதாகவும் கொழும்பில் தெரிவிக்கப்படுகின்றது. கட்டுநாயக்கா ஊடான பயணப் பாதுகாப்பு உறுதி உரிய வகையில் கிடைத்தால் மட்டுமே இந்தப் பயணத்தைப் புலிகளின் உயர் மட்டக் குழுவினர் முன்னெடுப்பர் எனப் புலிகளின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நெருடல் இணையம்
|