|
வவுனியா காயங்குளம் தாக்குதலில் போராளி வீரச்சாவு |
|
|
|
Friday, 02 June 2006 |
|
வவுனியா மாவட்டம் காயங்குளம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை சிறிலங்காப் படையினர் நடத்திய திடீர்த் தாக்குதலில் போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.கப்டன் தமிழ்மதி என்றழைக்கப்படும் வைரவர் கோவில் அருகாமை பரந்தன் கிளிநொச்சியைச் சொந்த முகவரியாகவும், உதயநகர் கிழக்கு உதயநகர் கிளிநொச்சியை தற்காலிக முகவரியாகவும் கொண்ட இராசரத்தினம் ஆதவன் என்ற போராளியே வீரச்சாவடைந்தவர் ஆவார்.இம்மாவீரருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தினை தெரிவித்துள்ளனர்.
நெருடல் இணையம்
|