|
வடக்கில் வெளிநாட்டு கூலிப்படை: கொழும்பு நாளிதழ் |
|
|
|
Saturday, 22 July 2006 |
வெளிநாட்டுக் கூலிப்படைக் குழு ஒன்று அண்மையில் வடக்கிற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச புலனாய்வுப் பிரிவினால் சிறிலங்கா அரசாங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கொழும்பு நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அச்செய்தி விவரம்:
வடக்கிற்கு அழைக்கப்பட்டிருக்கும் வெளிநாட்டுக் கூலிப்படையில்
ஆப்கானிஸ்தான் உட்பட ஆசிய நாடுகளின் கெரில்லா இயக்கங்களுடன்
தொடர்புடையவர்களும் உக்ரெய்ன் நாட்டவர்களும் இருக்கலாம் என்று சர்வதேச
புலனாய்வுப் பிரிவினர் தங்களின் அறிக்கையினூடாக
சுட்டிக்காட்டியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்குத் தேவையான கனரக ஆயுதப் பயிற்சிகள் மற்றும் அதிநவீன
ஆயுத கையாள்கை பற்றிய பயிற்சிகளை வழங்குவதற்காக வெளிநாடுகளிலிருந்து
அழைத்து வரப்படும் கூலிப்படையினருக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் பெருமளவு
பணத்தை வழங்குவதாகவும் அந்தப் பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.
நெருடல் இணையம்
|