|
யுத்தத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருமாறு இருதரப்பிடமும் கோபி அனான் வேண்டுகோள் |
|
|
|
Friday, 04 August 2006 |
|
வடக்கு-கிழக்கில் தற்போது எழுந்து யுத்த நிலைமை குறித்து ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளதாகவும், குறிப்பாக தண்ணீர்ப் பிரச்சினையையடுத்து ஏற்பட்ட யுத்தம் குறித்து அவதானித்து வருவதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் கோபி அனான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது இடம்பெற்று வருகின்ற யுத்தத்தை இருதரப்பினரும் உடனேயே நிறுத்தி தன்னார்வ மற்றும் மனிதநேய அமைப்புக்களின் நிவாரணப் பணிகளுக்கு உதவ வேண்டுமெனவும் தடைப்பட்டுப் போயுள்ள பேச்சுக்களைத் தொடங்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போதைய நெருக்கடியில் சிறுவர்கள் உட்பட பல பொதுமக்கள் இடம்பெயர்ந்துள்ளார்கள் என்ற செய்தி வருத்தத்தை தருவதாகவும் தெரிவித்துள்ள கோபி அனான், இருதரப்பினரும் யுத்தத்தை நிறுத்தி தண்ணீர் விவகாரத்தைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். நெருடல் இணையம்
|