|
புலிகளைப்பற்றி பேச வேண்டாமென மிரட்டினால் அவர்களைப் பற்றி அதிகமாக பேசுவோம் வைகோஅறிவிப்பு |
|
|
|
Friday, 11 August 2006 |
இலங்கையில் தனி ஈழம் கேட்டு போராடி வரும் விடுதலைப் புலிகளுக்கு எங்களது ஆதரவு என்றும் தொடரும். அவர்களை நாம் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம். அதனால் விடுதலைப் புலிகளைப் பற்றி பேசக்கூடாதென எங்களை மிரட்டினால் அவர்களைப் பற்றி அதிகமாக பேசுவோம் என்று ம. தி. மு. க. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ம.தி. மு. க. செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் பேசுகையில்,
மரண பூமியான இலங்கையில் போராடும் விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் துணிச்சல் முதலமைச்சருக்கு இல்லை. தமிழகத்தில் வன்முறையை நாங்கள் ஆதரிக்கவில்லை. விடுதலைப் புலிகளின் போராட்டத்தை இலங்கையில் ஆதரிக்கின்றோம். இதற்கு கருணாநிதி மிரட்டுகிறார். தனி ஈழம் கேட்டு போராடும் விடுதலைப் புலிகளை என்றும் ஆதரிப்போம். அவர்களைப் பற்றி பேசக்கூடாது என மிரட்டினால் அதிகமாக பேசுவோம்.
நெருடல் இணையம்
|