|
இலங்கைக்கு இராணுவ ரீதியில் இந்தியா உதவினால் |
|
|
|
Sunday, 20 August 2006 |
|
அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவிக்கும் இலங்கை அரசுக்கு இராணுவ ரீதியிலான எந்தவித உதவியையும் இந்தியா வழங்கக்கூடாது. அவ்வாறு இந்தியா உதவினால் கிராமம் கிராமமாகச் சென்று ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு திரட்டுவேன் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இராமநாதபுரம் மாவட்ட ம.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் நேற்று முன்தினம் மாலை முதுகுளத்தூரில் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அ“வர் மேலும் தெரிவிக்கையில்; இலங்கைத் தமிழர்களை அடியோடு அஷ்த்துவிட வேண்டுமென்ற இனவெறியோடு சிங்கள இராணுவத்தினர் அவர்களை தாக்கி வருகின்றனர். எங்கு தமிழர்களை அழிக்கப்பட்டாலும் அவர்கள் வேர்விட்டு முளைப்பவர்கள் என்பதை இராணுவத்தினர் இன்னும் உணரவில்லை.
தமிழர்களின் தடத்தை அழிக்க நினைக்கும் சிங்கள இராணுவத்திற்கு எந்த சூழ்நிலையிலும் இந்தியா உதவக்கூடாது. அவ்வாறு உதவினால் அது தமிழக மக்களையும் ஏமாற்றும் செயல். அனைத்தையும் மீறி அவ்வாறு இலங்கை அரசுக்கு இராணுவ உதவியை இந்திய அரசாங்கம் வழங்குமானால் கிராமம் கிராமமாகச் சென்று ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு திரட்டுவேன் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன். நெருடல் இணையம்
|