பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow படுகொலைக்கு புலிகள் காரணமில்லை
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

படுகொலைக்கு புலிகள் காரணமில்லை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 19 September 2006

sized_rauf_hakeem.jpgசர்வதேச விசாரணைக்கு வலியுறுத்த ஐ.நா.விடம் முறைப்பாடு: ஹக்கீம்

அம்பாறை படுகொலைச் சம்பவத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் காரணமில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.


படுகொலைச் சம்பவ இடத்துக்கு ரவூப் ஹக்கீம் நேற்று திங்கட்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.

அதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் ரவூப் ஹக்கீம் கூறியதாவது:
விடுதலைப் புலிகள் இதனைச் செய்திருப்பார்கள் என்ற முடிவுக்கு என்னால் வர முடியாது. இந்தப் படுகொலையை விடுதலைப் புலிகள் செய்திருக்க மாட்டார்கள் என்றுதான் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

படுகொலைச் சம்பவம் தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதியை சந்தித்துப் பேச உள்ளேன்.

இச்சந்திப்பின் போது சர்வதேச நாடுகளின் உதவியுடன் விசாரணைகளை நடத்துவதற்கு வேண்டுகோள் விடுக்கப்படும்.

படுகொலைச் சம்பவ நடந்த இடமானது முழுமையாக சிறிலங்கா இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசம். அங்கு விடுதலைப் புலிகள் உள்நுழைந்திருப்பதாகத் தெரியவில்லை என்றார் ஹக்கீம்.

Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..