பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow யாழில் ஊரடங்குவேளைகளில் வியாபார நிலையங்களில் திருட்டு
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

யாழில் ஊரடங்குவேளைகளில் வியாபார நிலையங்களில் திருட்டு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 19 September 2006

sized_sl-army-soldier.jpgயாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் ஊரடங்குச் சட்டம் அமுலிலிருந்த வேளை நகைப் பட்டறைகள் மதுபானசாலை மற்றும் மினித் தியேட்டர் என்பன உடைக்கப்பட்டு திருட்டு இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் ராஜா தியேட்டருக்கு முன்னால் அமைந்துள்ள கடைத்தொகுதியிலுள்ள கடைகளே நேற்று முன்தினம் இரவு உடைக்கப்பட்டு திருட்டுக்கள் இடம்பெற்றுள்ளன.

ஒரு கடையில் இருந்து மட்டும் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட தங்க மோதிரங்கள் மற்றும் பெருந்தொகைப் பணம் என்பன திருடப்பட்டுள்ளது.


மினி தியேட்டரில் இருந்த பொருட்கள் தூக்கி வீசப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய கடைகளும் உடைத்து தேடுதல் நடைபெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


இதேவேளை குறிப்பிட்ட பகுதியில் அயலிலுள்ள வீடுகள் மீதும் கற்கள் வீசப்பட்டதாகவும் தெரியவருகிறது.

ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டிருந்தவேளையிலே இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதால் நிச்சயமாக இது படையினரால் அல்லது அவர்களுடக் இயங்கும் துணை ஆயுதக் குழுக்களால் நடத்தப்பட்டிருக்கலாமென மக்கள் தெரிவிக்கின்றனர்.

Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..