பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow குடாநாட்டில் உள்ள பேக்கரிகளுக்கு உரிமையாளர் சங்கம் எச்சரிக்கை
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

குடாநாட்டில் உள்ள பேக்கரிகளுக்கு உரிமையாளர் சங்கம் எச்சரிக்கை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 19 September 2006

sized_bakery-bread.gifயாழ் அரச அதிபரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பாண் உற்பத்தி செய்யாத பேக்கரிகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும் என யாழ் மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கம் மீண்டும் எச்சரித்துள்ளது.



குடாநாட்டிலுள்ள பேக்கரிகள் பாணை நிறை குறைத்து உற்பத்தி செய்வதாகவும் தரமற்ற முறையில் தயாரிப்பதாகவும் அரச அதிபரால் பேக்கரி;களுக்குகென விநியோகிக்கப்படும் மாவை சில பேக்கரிகள் வெளியாருக்கு விற்பதாகவும் தெரிவிக்கப்படுவது குறித்துக் கேட்டபொழுது- யாழ் மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கம் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

முறையற்ற விதத்தில் செயற்படும் பேக்கரிகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் இது குறித்து எமது சங்கத்திடமோ அல்லது அருகிலுள்ள பிரதேச செயலகங்களுடனோ தகுந்த ஆதாரங்களுடன் முறையிட்டால் சம்மந்தப்பட்ட பேக்கரி உரிமையாளர்கள் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படுமென பேக்கரி உரிமையாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அண்மையில் மேற்படி விடையம் தொடர்பாக யாழ் மாவட்ட நீதிபதி இ.த.விக்னராஜா யாழ் குடாநாட்டிலுள்ள பேக்கரிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..