|
கரவட்டி குருக்கள் சுட்டுக் கொலை |
|
|
|
Wednesday, 20 September 2006 |
|
கரணவாய் கரவட்டி குருக்கள் பாடசாலைக்கு அண்மையில் நேற்றுப் பிற்பகல் 2.15 மணிக்கு இனந்தெரியோதாரால் ஒருவர் சுடப்பட்டுள்ளார்.
அதேயிடத்தைச்சேர்ந்த ஆசிரியரான சிவானந்தம் சுப்பிரமணியம் (வயது32)
என்பவரே படுகாயமடைந்தார். இவர் சிகிச்சைக்காக பருத்துத்துறை அரசினர் ஆதார
வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
புpன்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.
இதேவேளை
கைதடி தெற்குப் பகுதியிலும் இனந்தெரியாதோர்களால் மேற்கொள்ளப்பட்ட
துப்பாக்கிச் சூட்டில் அதேயிடத்தைச்சேர்ந்த வி.எஸ் சுப்பிரமணியம் (வயது50)
என்பவர் காயமடைந்தார்.
ஆவர் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் வீட்டில் இருந்த சமயம் இனந்தெரியாதவர்களால் சுடப்பட்டதாகத் தெரியவருகிறது.
பிந்திக்கிடைத்த
தகவலின்படி .இனந்தெரியாதோரால்; சுடப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்
போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட.கரணவாய் கரவட்டி ஆசிரியரான
சிவானந்தம் சுப்பிரமணியம் (வயது32) இன்று சிகிச்சை பலனளிக்காமல்
இறந்துள்ளதாக தெரியவருகிறது.
|