|
மாமனிதர் மண்டேலாவுக்கு 'மனச்சாட்சியின் தூதுவர்' விருது |
|
|
|
Wednesday, 20 September 2006 |
 சர்வதேச மன்னிப்புச் சபையின் அதி கௌரவ விருது தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டுக்கான ஹமனச்சாட்சியின் தூதுவர்' விருதை மாமனிதர் மண்டேலாவுக்கு (88 வயது) வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த விருதை தென்னாபிரிக்க எழுத்தாளரும் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப்
பெற்றவருமான நதீன் கோடிமர் எதிர்வரும் நவம்பர் 1 இல் ஜோஹன்னர்ஸ்
பேர்க்கில் வைத்து கையளிப்பார்.
பொது வாழ்வில் வேறு எவரிலும் பார்க்க நம்பிக்கைஇ கொள்கைப் பற்றுக்கு
அடையாளமாக விளங்கும் உன்னத மனிதர் மண்டேலா என்று டப்ளினை தளமாகக்
கொண்டியங்கும் சர்வதேச மன்னிப்புச் சபையின் ஸ்தாபகரான பில் சிப்பே
தெரிவித்தார்.
1990 பெப்ரவரியில் சிறையிலிருந்து விடுதலையான பின் மண்டேலா உலகளாவிய பல
லட்சோப லட்சம் மக்களுக்கு தனது தனிப்பட்ட மற்றும் அரசியல்
தலைமைத்துவத்தின் மூலம் ஆகர்ச சக்தியாக விளங்கி வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.
நெருடல் இணையம்
|