|
அனைத்துத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்ட நிலையில் தீவகம் |
|
|
|
Wednesday, 20 September 2006 |
|
யாழ் குடாநாட்டில் தீவகப் பகுதி ஏனைய பகுதிகளிலிருந்து முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.
தீவகப் பகுதிகளுக்கான தொலைத்தொடர்புகள், தரைவழித் தொடர்புகள்,
கடல்வழித் தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டிருப்பதாக எமது யாழ்
செய்தியாளர் தெரிவிக்கிறார்.
தீவகப் பகுதிகளுக்குச் செல்வதற்கோ
அல்லது தீவகப் பகுதிகளிலிருந்து யாழ் நகரப் பகுதிகளுக்குச் செல்வதற்கோ
எவரையும் இராணுவத்தினர் அனுமதிப்பதில்லையென யாழ் செய்தியார் கூறுகிறார்.
தீவகப்
பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் உள்நாட்டு உற்பத்திப் பொருள்களான
புகையிலை, உணவுப் பொருள்களுக்கான சந்தைவாய்ப்பு இல்லாமல் போயுள்ளது.
இதனால் தீவகப் பகுதி மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.
நெருடல் இணையம்
|