|
பேச்சுவார்த்தை மூலமே இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்- அமெரிக்கத் தூதுவர் |
|
|
|
Wednesday, 20 September 2006 |
|
இலங்கையின் இனப்பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க வேண்டுமென இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் றொபேட்ர்.ஓ.பிளேக் தெரிவித்தார்.
நேற்று செவ்வாய்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
“
வன்முறைகளைக் கைவிட்டுவிட்டு விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைக்கு
உடனடியாகத் திரும்ப வேண்டும், தமிழ் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றக்
கூடிய அரசியல் தீர்வின் மூலமே இனப்பிரச்சினையை தீர்க்க முடியுமென அமெரிக்க
திடமாக நம்புகிறது” என அவர் தெரிவித்தார்.
பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காக மாத்திரமே அமெரிக்கா,
இலங்கைக்கு இராணுவ உதவிகளை வழங்குவதாக அங்கு குறிப்பிட்ட அமெரிக்கத்
தூதுவர், இலங்கையின் அமைதி முயற்சியில் நோர்வேயின் செயற்பாடுகளுக்கு
அமெரிக்கா பூரண ஆதரவு வழங்குமெனக் கூறினார்.
சமாதான முயற்சிகள் மற்றும் தேசிய ரீதியில் முக்கியமான விடயங்கள் குறித்து
சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் பொதுவான
இணக்கப்பாடு என்றை எட்டுவதற்கு பேச்சுவார்;த்தைகளை ஆரம்பித்திருப்பது ஒரு
ஆரோக்கியமான நடவடிக்கை எனவும், நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்
மாநாட்டில் மேலும் கருத்துத் தெரிவித்த இலங்கைக்கான அமெரிக்காவின் தூதுவர்
றொபேட்ர்.ஓ.பிளேக் கூறினார்.
நெருடல் இணையம்
|