|
குடாநாட்டில் பால் மா வகைகள் தட்டுப்பாடு – குழந்தைகள் அவதி |
|
|
|
Thursday, 21 September 2006 |
|
குடாநாட்டில் குழந்தைகளுக்கான பால் மா வகைகள் உட்பட அனைத்து பால் மா வகைகளுக்கும் மிகப்பெரும் தட்டுப்பாடு நிலவுவதால் சிறுவர் முதல் பெரியோர் வரை பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
தாய்ப்பால் அற்ற குழந்தைகளுக்கு இத்தகைய பால்மா வகைகளும் இன்மையால்
போசாக்கு இன்மையால் கடுமையாக பாதிக்கப்படும் அபாயநிலை தோன்றியுள்ளது.
கடந்த வாரம் முதல் முன்னர் 160 ரூபாவரை விற்பனை செய்யப்பட்டு வந்த சில
பால் மா வகைகள் 300ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வந்தன.
தற்போது அந்த
விலைக்குக் கூட பெறமுடியாமல் இருக்கிறது.
இதேவேளை கால்நடைகளுக்கான தீவனங்களும் குடாநாட்டில் பெறமுடியாதநிலை
ஏற்பட்டுள்ளது.
இதனால் தேவையான அளவு பசுப்பாலையும் பெறமுடியாத
சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. பாலின் விலையும் கணிசமான அளவு
அதிகரித்துள்ளது.
ஆத்தியாவசிய பால்மா வகைகளையும் குடாநாட்டுக்கு உடனடியாக தருவிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கேட்டுள்ளனர்.
|