பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow கொழும்பில் பாரிய சோதனை நடவடிக்கை
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

கொழும்பில் பாரிய சோதனை நடவடிக்கை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 24 September 2006
கொழும்பு நகருக்குள் நுழையும் இடங்களில் பாரிய சோதனை நடவடிக்கை நேற்று மேற்கொள்ளப்பட்டது.


வவுனியா-மதவாச்சி சோதனைச் சாவடியில் பெருந்தொகையான ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கொழும்பு நகருக்கும் நுழையும் இடங்களான இரண்டு களனி பாலங்கள், மட்டக்குளி, மொறட்டுவ, மற்றும் பத்தரமுல்ல ஆகிய பகுதிகளில் நேற்று சனிக்கிழமை காலை பாரிய சோதனை நடவடிக்கை நடத்தப்பட்டது.

கொழும்பில் வழமையாக மேற்கொள்ளப்படும் ஒரு சோதனை நடவடிக்கை இது என்று பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே வத்தளையில் 2 மைக்ரோ பிஸ்டல்கள் மற்றும் 50 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் 9 தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..