பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள் arrow விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்துமாறு சிறிலங்காவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்துமாறு சிறிலங்காவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 24 September 2006

sized_condoleezza_riceதமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்கான உறுதியான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு சிறிலங்காவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. 


ஐ.நா. கூட்டத்துக்கு மகிந்தவுடன் சென்றிருந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமெரிக்காவின் இராஜாங்க விவகாரங்களுக்கான செயலாளர் கொண்டலீசா றைசை நேற்று சனிக்கிழமை சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்பின் போது, நோர்வே அனுசரணையுடனான அமைதிப் பேச்சுக்களை அமெரிக்கா உறுதியாக ஆதரிப்பதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான உறுதியான செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் மங்களவிடம் கொண்டலீசா றைஸ் அறிவுறுத்தியுள்ளார்.

மூதூரில் பிரெஞ்சு நிறுவன பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் சிறிலங்காவில் அதிகரிக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் இச்சந்திப்பில் மங்கள சமரவீரவிடம் கொண்டலீசா றைஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

மூதூர் படுகொலை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் சர்வதேச அளவிலான சுயாதீன விசாரணைக் குழுவை நியமிக்க உள்ளதாக கொண்டலீசா றைசிடம் மங்கள சமரவீர விளக்கம் அளித்துள்ளார். அதனை தான் வரவேற்பதாக கொண்டலீசா றைஸ் பதிலளித்துள்ளார்.
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..