பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow தெற்கின் பாதுகாப்பு அதிகரிப்பு
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

தெற்கின் பாதுகாப்பு அதிகரிப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 24 September 2006

sized_060509153304.xq5u40kf2_sri-lanka-army-and-police-personnel-inspect-a-vehibதென் மாகாணத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வாடகை வீடுகள், விடுதிகள்இ ஹோட்டல்கள் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த வாகனங்கள் கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

பொலிஸார் 60 மோட்டார் சைக்கிள்களிலும், ஆறு விசேட வாகனங்களிலும் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

060509153304.xq5u40kf2_sri-lanka-army-and-police-personnel-inspect-a-vehibகுறிப்பாக நள்ளிரவு நேரங்களில் வீதிச் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

வேகமாக செல்லும் வாகனங்கள், மதுபோதையில் செல்லும் சாரதிகள் கண்டு பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது.

முக்கிய வீதிகள் சந்திகளிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கதிர்காமத்துக்கு யாத்திரையாக வருபவர்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இருந்து தென் பிராந்தியத்துக்குள் வருகின்ற வாகனங்களும், அதில் பயணிப்போரும் விசாரிக்கப்படுகின்றனர்.

சந்தேகத்துக்கு இடமான பொருட்கள், பொதிகள் குறித்தும் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

அவ்வாறான பொருட்களைக் கண்டால் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்குப் பகுதிக் காடுகளில் இருந்து விடுதலைப் புலிகள் இப் பகுதிக்குள் ஊடுருவுவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொலிஸாரின் இந்த நடவடிக்கைகளின்போது கஞ்சா கடத்துவோர் பலர் அகப்பட்டுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..