பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow த.தே.கூ. பத்மநாபனின் பாதுகாவலரை சுட்டுப் படுகொலை செய்தது வெள்ளை வான் குழு
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

த.தே.கூ. பத்மநாபனின் பாதுகாவலரை சுட்டுப் படுகொலை செய்தது வெள்ளை வான் குழு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 24 September 2006
sized_white_van_srilankaதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.பத்மநாபனின் பாதுகாவலரை வெள்ளை வானில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுப் படுகொலை செய்துள்ளனர்.

கே.பத்மநாபனின் பாதுகாவலர் படுகொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து 100 மீற்றர் தொலைவில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையின் முகாம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசம் விநாயகபுரத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக கே.பத்மநாபன் தெரிவு செய்யப்பட்டது முதல் இரு பிள்ளைகளின் தந்தையான குஞ்சித்தம்பி குவேந்திரன் (வயது 38) அவருக்கு பாதுகாவலராக இருந்து வந்தார்.

தனது சொந்த இருப்பிடமான தம்பிலுவிலிருந்து அக்கரைப்பற்றுக்கு சென்று ஊதியத்தைப் பெற்றுக் கொண்டு தனது நண்பருடன் உந்துருளியில் சென்று பேரூந்துக்காக காத்திருந்த போது முற்பகல் 10.40 மணியளவில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

படுகொலை செய்யப்பட்ட குவேந்திரன் உடல் அக்கரைப்பற்று மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அம்பாறை நகரத்திலிருந்து 27 கிலோ மீற்றர் தொலைவில் தென்கிழக்கில் அக்கரைப்பற்று உள்ளது.
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..