|
பசிக்கொடுமையால் அரிசியை பறித்து சென்ற குடும்பஸ்தர் |
|
|
|
Sunday, 24 September 2006 |
|
பசியின் கொடுமை தாங்காது குடும்பஸ்தர் ஒருவர் வீதியால் பெண்ணொருவர் வாங்கிச் சென்ற அரிசியை அபகரித்துக் கொண்டு ஓடிய பரிதாப சம்பவமொன்று யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது;
நேற்றுமுன்தினம்
பெண்ணொருவர் பையொன்றில் அரிசி வாங்கிக்கொண்டு மானிப்பாய் வீதியால்
சென்றுள்ளார். அச்சமயம் வேகமாக வந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க
குடும்பஸ்தர் ஒருவர் அப்பெண்ணின் கையிலிருந்த அரிசியை பறித்துக்கொண்டு
வேகமாக ஓடியுள்ளார்.
அரிசியை பறிகொடுத்த பெண் திருடன்,திருடன் எனக்
கூச்சலிடவே பெண்ணிடம் இருந்து நகைகளை அபகரித்துக்கொண்டு திருடன் ஓடுவதாகக்
கருதி அப்பகுதியில் நின்றிருந்த மக்கள் அந்தக் குடும்பஸ்தரைத்
துரத்திப்பிடித்தனர்.
பசியின் கொடுமையால் ஓடக்கூட முடியாது நின்ற
அக்குடும்பஸ்தர் தானும் மனைவி பிள்ளைகள் எவருமே நான்கு நாட்களாக
சாப்பிடவில்லை எனவும் பசிக்கொடுமை தாங்கமுடியாததால் குழந்தைகள் பசியால்
வாடுவதைப் பொறுக்க முடியாது தான் இவ்வாறு செய்ததாகவும் விம்மி அழுது
கூறியுள்ளார்.
நெருடல் இணையம்
|