|
ரொறன்ரோவில் தமிழ் இளைஞர்கத்தியால் குத்திப் படுகொலை. |
|
|
|
Sunday, 24 September 2006 |
|
வடமராட்சி, குடத்தனை, அம்பன் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கனடாவிலுள்ள ரொறென்ரோ நகரில் வைத்து இனந்தெரியாதோரால் வழிமறித்து கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 17ஆம் திகதி காலையில் நடைபெற்ற இச்சம்பவத்தில் தர்மகுல சிங்கம்
பிரதீப்(வயது 25) என்ற இளை ஞரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
தனது
பெற்றோருடன் 5 வயதில் கனடாவில் குடியேறிய இவர் சம்பவ தினத்தன்று தனது
காரில் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தபோது இனந் தெரியாதோரால்
வழிமறிக்கப்பட்டு கத்தியால் குத்தப்பட்டு கொலை செய் யப்பட்டுள்ளதாக
அங்கிருந்து உறவின ருக்குக் கிடைத்த தகவலில் தெரிவிக்கப் பட்டது.
Nitharsanam
|