|
மல்லாகச் சந்தியில் உள்ள மாவீரர் நினைவுப் படங்கள் உடைப்பு. |
|
|
|
Sunday, 24 September 2006 |
|
மல்லாகம் சந்தியில் மாவீரர்களின் நினைவுப்படங்கள் வைப்பதற்காக கட்டப்பட்டிருந்த கட்டிடம் இரவுடன் இரவாக அடித்துடைக்கப்பட்டுள்ளது.
மல்லாகம் சந்தியில் உள்ள தனியார் காணியில் அமைக்கப்பட்ட இருந்த கட்டிடமே
கடந்த வெள்ளிக்கிழமை இரவு உடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இரவு நேரம் ஊரடங்குச் சட்டம் உள்ள வேளையில் குறிப்பிட்ட கட்டிடத்தின்
கூரைகள் உடைக்கப்பட்துடன் அதில் இந்த கூரை,சீற்றுக்கள்,மரங்கள் என பல
பொருட்களும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சந்தியில்
ஈ.பி.டி.பி யினரின் முகாம் அமைந்துள்ளதுடன் அவர்களின் பாதுகாப்பிற்காக
இராணுவ முகாமும் அப் பகுதியில் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
நெருடல் இணையம்
|