பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள் arrow பிரான்சில் நினைவுநாள் நிகழ்வு
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

பிரான்சில் நினைவுநாள் நிகழ்வு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 09 October 2006
nerudal_kumarappa-franceதமிழீழ விடுதலைக்காய் களமாடி வீரமரணமான லெப் கேணல் குமரப்பா, லெப் கேணல் புலேந்திரன், உட்பட பன்னிரு வேங்கைகளின் நினைவாகவும் தியாக தீபம் லெப் கேணல் திலீபன், கேணல் சங்கர், கேணல் ராயூ, லெப் மாலதி, லெப் கேணல் நாதன், கப்டன், கஜன், ஆகியோரின் நினைவாகவும் நேற்று மாலை பாரிஸின் புறநகர் பகுதியான La Plaine St Denis உள்ள L S C மண்டபத்தில் நினைவெழுச்சி மாலை 04.00 மணிக்கு ஆரம்பமாகியது.

kumarappa-franceஇந் நிகழ்வில் பொதுச் சுடரினை வீரவேங்கை கையிலனின் சகோதரரான திரு அருள் அவர்கள் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழீழ தேசியக் கொடியினை வீரவேங்கை குட்டியின் சகோதரரும் பிரான்ஸ் நாட்டின் நிதிப் பொறுப்பாளாருமாகிய திரு. ஜெயா அவர்கள் ஏற்றி வைத்தார், ஈகைச் சுடரினை கப்டன் கஜனின் சகோதரரான திரு பிறேம் அவர்கள் ஏற்றிவைத்தார்.

இதைத் தொடர்ந்து பிரான்ஸ் வாழ் தமிழீழ மக்கள் மலர் வணக்கம் செலுத்தினர். கலைபண்பாட்டுக் கழகத்தின் சின்னஞ்சிறுவர்களும், சிறுமியர்களும், விடுதலைப் பாடல்களையும், நியூலி சூமார் தமிழ்ச் சோலை மாணவர்களும், T Boys நடனக் குழுவினரும், நிருத்தியாலய மாணவிகளும்,  T Style நடனக் குழுவினர்கள் விடுதலைப் பாடல்களுக்கு எழுச்சி நடனம் வழங்கியிருந்தனர். நிகழ்வில் பங்கு பற்றிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரான திரு. ஜெயானந்த மூர்த்தி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

இறுதி நிகழ்வாக தமிழீழ தேசியக் கொடி இறக்கல் நிகழ்வுடனும், நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற எழுச்சி பாடலுடன் இந் நிகழ்வு 20.00 மணிக்கு நிறைவு பெற்றது. 


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..