பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள் arrow இலங்கையில் மீண்டும் போர் ஏற்பட்டால் அது இந்தியாவைப் பாதிக்கும்.
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

இலங்கையில் மீண்டும் போர் ஏற்பட்டால் அது இந்தியாவைப் பாதிக்கும். அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 23 November 2006

 இலங்கையில் மீண்டும் போர் ஏற்பட்டால் அது இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தும் என இந்தியாவின் தனியார் ஆங்கில தொலைக்காட்சி சேவை ஒன்று நேயர்களின் கருத்தை அறியும் தொலைக்காட்சி  கருத்து கணிப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் மூலம் அறிந்துள்ளதாக தெரிவித்துள்ளது.  

இலங்கையில் மீண்டும் போர் மூழுமானால் அதனால் இந்தியாவுக்கு நேரடியான பாதிப்புகள் ஏற்படுமா இல்லையா என்பது குறித்தே அக் கருத்துக் கணிப்பு நடைபெறுகிறது. 

நேற்று மாலை வரை இணையத் தளம் மற்றும் கையடக்க தொலைபேசி குறுந்தகவல்கள் மூலம் கருத்துக்களை தெரிவித்;துள்ள 63.2 வீதமானவர்கள் இலங்கையில் மீண்டும் போர் ஏற்பட்டால் அது இந்தியாவை நேரடியாக பாதிக்கும் என தெரிவித்துள்ளனர். இதில் 36.8 வீதமானாவர்கள் பாதிப்புக்கள் ஏற்படாது என குறிப்பிட்டுள்ளனர்.

 இலங்கையில் போர் மூழும் ஆபத்து காணப்படுவதாகவும் அரசியல் ரீதியான தீர்வு முயற்சிகளுக்கப்பால் இராணுவ ரீதியிலான தீர்விலேயே முனைப்புகள் வெளிப்படுவதாகவும்; இந்த இந்திய தொலைக்காட்சி நிகழ்வில்; ஆராயப்பட்டதாகவும் கடந்த ஒரு சில நாட்களாக இந்த தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட அரசியல் கள நிகழ்ச்சியில் இலங்கை அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பினரின் செவ்விகளை ஒளிபரப்பியதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


சங்கதி
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..