|
இலங்கையில் மீண்டும் போர் ஏற்பட்டால் அது இந்தியாவைப் பாதிக்கும். |
|
|
|
Thursday, 23 November 2006 |
|
இலங்கையில் மீண்டும் போர் ஏற்பட்டால் அது இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தும் என இந்தியாவின் தனியார் ஆங்கில தொலைக்காட்சி சேவை ஒன்று நேயர்களின் கருத்தை அறியும் தொலைக்காட்சி கருத்து கணிப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் மூலம் அறிந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இலங்கையில் மீண்டும் போர் மூழுமானால் அதனால் இந்தியாவுக்கு நேரடியான
பாதிப்புகள் ஏற்படுமா இல்லையா என்பது குறித்தே அக் கருத்துக் கணிப்பு
நடைபெறுகிறது.
நேற்று மாலை வரை இணையத் தளம் மற்றும் கையடக்க தொலைபேசி குறுந்தகவல்கள்
மூலம் கருத்துக்களை தெரிவித்;துள்ள 63.2 வீதமானவர்கள் இலங்கையில் மீண்டும்
போர் ஏற்பட்டால் அது இந்தியாவை நேரடியாக பாதிக்கும் என தெரிவித்துள்ளனர்.
இதில் 36.8 வீதமானாவர்கள் பாதிப்புக்கள் ஏற்படாது என குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கையில் போர் மூழும் ஆபத்து காணப்படுவதாகவும் அரசியல் ரீதியான தீர்வு
முயற்சிகளுக்கப்பால் இராணுவ ரீதியிலான தீர்விலேயே முனைப்புகள்
வெளிப்படுவதாகவும்; இந்த இந்திய தொலைக்காட்சி நிகழ்வில்;
ஆராயப்பட்டதாகவும் கடந்த ஒரு சில நாட்களாக இந்த தொலைக்காட்சியில்
நடத்தப்பட்ட அரசியல் கள நிகழ்ச்சியில் இலங்கை அரசாங்கம் மற்றும் தமிழீழ
விடுதலைப் புலிகள் தரப்பினரின் செவ்விகளை ஒளிபரப்பியதாகவும் அங்கிருந்து
கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சங்கதி
|