|
விடுதலைப் புலிகளை பயங்கரவாதப் பட்டியலிட்டது சட்டவிரோதம் - அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு! |
|
|
|
Wednesday, 29 November 2006 |
|
அமெரிக்க நீதிமன்றம் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷின் அரசாங்கத்தினால், அமெரிக்க அரசயலமைப்புக்கு முரணான விதத்திலும், தெளிவற்ற நிலையிலும், பயங்கரவாதப் பட்டியலிடப்பட்ட இரண்டு குழுக்கள் குறித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் குர்டிஸ்தான் விடுதலை அமைப்பு ஆகிய
இரண்டு குழுக்களையும், 911 தாக்குதலின் பின்னர், பயங்கரவாதப் பட்டியலில்
இணைத்து, இந்த அமைப்புக்களின் சொத்துக்களை முடக்கியமை செல்லுபடியற்றது என
அமெரிக்க மாவட்ட நீதிபதி ஓட்றி கொலின்ஸ் இன்று தெரிவித்துள்ளார்.
புஷ்
அரசாங்கத்தினால் இந்த இரண்டு அமைப்புக்களையும் பயங்கராவாதப் பட்டியலில்
இணைக்கப்பட்டமைக்கு எதிராக வோஷிங்ரனைத் தளமாகக்கொண்டு இயங்கி வரும்
Humanitarian Law Project என்ற சட்ட நிறுவனம் இந்த வழக்கினை வாதாடியது.
இந்த நிறுவனத்தின் வழக்கறிஞர் டேவிட் கோல் இந்த வழக்கின் தீர்ப்புக்
குறித்து கருத்து வெளியிடுகையில், ஜனாதிபதி புஷ், தனது அதிகாரத்தின்
வாயிலாக இந்தத் தடையை பிரயோகித்திருந்ததாகக் குறிப்பிட்டார். இந்தத்
தீர்ப்பின் மூலம் பட்டியலிடப்பட்ட ஏனைய குழுக்கள் பட்டியலில் இருந்து
நீக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லையென்று எனத் தெரிவித்த டேவிட் கோல்,
ஆனால் இந்த பட்டியல் குறித்து பல சந்தேகங்கள் எழுந்துள்ளதாக மேலும்
தெரிவித்தார்.
வழங்கப்பட்ட தீர்ப்புக் குறித்து விடுதலைப்புலிகள் மற்றும் குர்டிஸ்தான
விடுதலை அமைப்புக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதாக ஏபி செய்தி நிறுவனம்
தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. இந்த தீர்ப்பு தொடர்பாக
அமெரிக்க நீதிநிர்வாக அமைச்சின் பேச்சாளர் சாள்ஸ் மில்லர் கருத்து
தெரிவிக்கும்போது, நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாகவும், அமெரிக்க அரசின்
அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாகவும் தற்போது ஆராய்ந்து வருவதாகத்
தெரிவித்தார்.
இதேவேளை, இந்தத் தீர்ப்புக் குறித்து எந்தவித கருத்தினையும் தெரிவிப்பதற்கு வெள்ளை மாளிகை வட்டாரங்கள் மறுப்புத் தெரிவித்துள்ளன.
நன்றி பதிவு
|