பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள் arrow சிறார் படைச்சேர்ப்பு தொடர்பாக கருணா குழு கவலை கொள்வதில்லை: ஐ.நா
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

சிறார் படைச்சேர்ப்பு தொடர்பாக கருணா குழு கவலை கொள்வதில்லை: ஐ.நா அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 28 April 2007
சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினர், சிறுவர்களை படையில் சேர்ப்பதில்லை எனக் கூறிய உறுதிமொழிகளை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை.
இந்த ஆயுதக்குழுவுக்கு அரசின் ஆதரவு முழுமையாக உண்டு என பரவலாக நம்பப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் சிறார் பாதுகாப்பு அமைப்பான யூனிசெஃப் நேற்று வெள்ளிக்கிழமை மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றது.

கிழக்கு மாகாணத்தில் கருணா குழுவினரின் நடமாட்டங்கள் உள்ள பகுதிகளில் சிறார்கள் படைகளில் பயன்படுத்தப்படுகின்றனரா என சோதனைகளை நடத்துவதற்காக கடந்த வாரம் யுனிசெஃப் தனது குழுவை அனுப்பியிருந்தது.
 
இது தொடர்பில் யுனிசெஃப்பின் பேச்சாளர் அன்றூ புறூக்ஸ் தெரிவித்துள்ளதாவது:
 
எமது குழுவின் இந்த நடவடிக்கை காட்டுப்புறப் பகுதியை நோக்கியதாக இருந்தது. எனினும் அவர்களின் முகாமை பார்வையிடுவதற்கான அனுமதியை கருணா குழு யுனிசெஃப் குழுவுக்கு வழங்கவில்லை. கால தாமதம், தடைகள், தவறான தகவல்கள் மூலம் எமது பணிகளை கருணா குழு  தடுத்து விட்டது.
 
எமது பெரும் முயற்சிகளின் மத்தியில் கருணா குழுவினர் சில சிறார்களை விடுவித்திருந்தனர். எனினும் அவர்கள் சிறுவர்களை தொடர்ந்தும் படையில் சேர்த்து வருவதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
 
சிறிலங்காவில் தற்போது உருவாகியுள்ள போர் நிலைமைகள் சிறார்களை அதிகம் பாதித்துள்ளது. கருணா குழு உண்மையுடன் நடந்து கொள்கிறதா என்பது தொடர்பாக நாம் கேள்வியை எழுப்பியுள்ளோம் என தெரிவித்தார்.
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..