பிரதான பக்கம் arrow Karuna Matter arrow துரோகி கருணாவின் மறுபக்கம்- பாகம் 17
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

துரோகி கருணாவின் மறுபக்கம்- பாகம் 17 அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 29 July 2007

karuna_marupakkamபிரச்சனையில்லை! போராளிகளைப் பின்வாங்கச் செய்யவேண்டாம். அவர்கள் தாக்குதலை நடத்திக் கொண்டேயிருக் கட்டும். நான் பார்க்கிறேன் என்று கூறிக்கொண்டே இராணுவத்தினருக்குப் பின்னால் சகபோராளிகளுடன் நிலையெடுத்து முன்னால் தாககுதல் நடத்தும் போராளிகளை தாக்குதலை நிறுத்தும்படி கூறிவிட்டு அவர்களைப் பாதுகாப்பாக நிலையெடுக்கக் கட்டளையிட்டுக் கொண்டு ஜோய் தாக்குதலை மேற்கொண்டான். இதை எதிர்பார்க்காத இராணுவத்தினர் திக்குமுக்காடி சிதறியோடினர். இதில் 20க்கு மேற்பட்ட இராணுவத்தினரும், 20 ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.

இத் தாக்குதல் முடிந்து செல்லும்போது கருணா ஜோயிடம் இப்படிக் கேட்டான். "ஏன் ஜோய், திடீரென்று திட்டமிடாமல் எப்படித் தாக்குதலை ஒழுங்குபடுத்தினாய்? " அதற்கு ஜோய் புன்னகைத்துக் கொண்டே, "நீங்கள் தாக்குதல் பற்றி என்னிடம் முன்னரே கூறும்போதே அது பிழைத்தால் எப்படி அதைச் சீர்செய்து முறியடிக்கலாம் என்று நான் ஏற்கெனவே திட்டமிட்டுவிட்டேன், " என்று கூறினான்.

இந்த விடயத்தைக்கூட கருணவினால் சகிக்க முடியவில்லை! ஏனெனில் தான் ஊகிக்கமுடியாத விடயத்தை ஜோய் ஊகித்துத் திறம்படச் செய்துவிட்டான் என்ற பொறாமைதான்! அது மட்டுமல்ல இதற்கு முன்னர் தாக்குதல்களை மேற்கொண்டால் அது பிழைக்கும் போது அதை எப்படிச் சீர் செய்வது என்று எங்கடை அம்மானுக்குத் தெரியவே தெரியாது. அதனால்தான் தாக்குதல்கள் பிழைக்கும்போது மற்றப் போராளிகள் தலையில் அதைக் கட்டிவிட்டு அம்மான் ஒதுங்கிவிடுவார். இந்த அநாகாக முறையைத்தான் அவர் கையாண்டார்.

அம்மான் பெரிய வீராதி வீரனில்லை! நேரடியாக சண்டைக்காலத்தில் நிற்பதாக அம்மான் தெரிவார். அதை வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு இதன் புதிர் விளங்காது. ஆனால் அம்மான் சண்டைக்களத்தில் நேரடியாக நிற்பதாகவே அவரது அதிகாரக்குரல் ஒலிக்கும். ஓட்டுமொத்தமாக அம்மான் பெரிய சயன்ஸ் மன்னன்.

1991 மட்டக்களப்புத் தரவையில் காலை நேரத்தில் மாவீரர் துயிலுமில்லத் திறப்புவிழாவும், மாலையில் மாவீரர் நிகழ்வும் நடந்தது. அந்நிகழ்வில் ஜோய் உரையாற்றினான்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட போராளிகளும், மக்களும் ஜோயைப் பற்றி நல்ல கருத்துக்களைப் பேசிக்கொண்டனர். ஏனெனில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஜோய் வந்தபின்தான் எதிரிகள் மீதான தாக்குதல்களும், நிர்வாக ஒழுங்கும் திறம்பட நடக்கின்றன என்று எல்லோரும் பேசிக்கொண்டனர். இது கருணாவின் காதுகளை எட்டியதும் ஈட்டியாகக் குத்தியது. தரவையிலுள்ள கூழாம் மரத்தின் கீழிருந்து கொண்டே கூழாம்பழம் ஒன்றை வாயில் போட்டுக் கொண்டே ஆழமாகச் சிந்தித்தான். கூழாம்பழத்தைப் போலவே தனது காதுக்கு எட்டிய செய்தியும் அம்மானுக்குப் புளிப்பாகவே தெரிந்தது.

கருணாவின் வஞ்சகத்தனத்திற்கு ஏற்றாற்போல் அப் பிரதேசங்களில் அடுத்தநாளே இராணுவ நடவடிக்கை ஒன்று அரச படையால் நடாத்தப்பட்டது. இந்த இராணுவ நடவடிக்கையை திசை திருப்புவதற்கு ஏதுவாக கொடுவாமடுவில் வைத்து இராணுவத்தினரைத் தாக்குவதற்கு ஜோய் திட்டமிட்டான். இத் திட்டம்பற்றி கருணாவுடன் தொடர்பு சாதனத்தில் பேசினான். உண்மையான ஈகைக் குணமும், தான் பிறந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் எந்தத் தியாகமும் செய்யக்கூடியவன்தான் உண்மையான போராளியாக இருக்கமுடியும். ஆனால் தன் சுயநலத்துக்காக உண்மையான விடுதலை வீரனையே அழிப்பதற்கு கருணா எப்போதுமே தயார் நிலையிலிருந்தான். அதனால்தான் இத் தாக்குதலுடன் ஜோயை முடிப்பதற்கு கருணா நயவஞ்சகத் திட்டமிட்டான்.

இத் தாக்குதல் திட்டமிட்டவாறு 1991ல் நடந்தது. இதில் ஜோய் படுகாயமடைந்தான் சகபோராளிகள் ஜோயைப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு வந்தனர். இந்தச் சண்டையில் 20க்கு மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டும், 17க்கு மேற்பட்ட இராணுவத்தினரின் ஆயதங்களும் கைப்பற்றப்பட்டன. ஜோயின் இந்நிலையைக் கேள்வியுற்று கருணா ஜோயைப் பார்க்க வந்தான். ஜோயிடம் கருணா கேட்டான், "ஏன் ஜோய், முன்னுக்குப் போன நீ பின்னுக்கு நின்றிருக்கலாந்தானே? " என்று. அதற்கு ஜோய் கூறினான், "சண்டை என்றால் அம்மான், அதற்குத் தலமை தாங்குபவர்கள் சண்டைக் களத்திலேயே நேரடியாக நிற்கவேண்டும். அப்படியிருந்தால்தான் அந்த நிலமைக்கேற்ற முடிவு எடுக்கமுடியும். தொலைத்தொடர்புமூலம் து}ரத்திலிருந்து கட்டளையிட்டால் அது எங்களுக்குப் பெரிய இழப்பைத்தான் ஏற்படுத்தும். நான் சம்பந்தப்பட்ட தாக்குதல்கள் வெற்றியளித்ததிற்கும், எமது போராளிகளுக்குப் பாரிய இழப்புக்கள் ஏற்படாததிற்கும் காரணம் அதுதான் அம்மான்! எனக்கு இந்த நிலமை ஏற்படும் என்று நான் உடன் எதிர்பார்க்கவில்லை! எனக்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை! நான் இறந்துவிடுவேன். தலமைக்கு விசுவாசமாக போராட்டம் தொடர்ந்தால் விடுதலை கிடைக்கும், " என்று கூறிவிட்டு ஓரிரு தினங்களில் ஜோய் என்ற அந்த வீரத்தளபதி வீரச்சாவடைந்து விட்டான்.

இதில் என்ன அதிசயம் என்றால் சகபோராளிகளுக்கான உணவுத் தேவைக்கு ஜோயினால் கட்டப்பட்ட வெதுப்பகமும் ஜோய் உயிர் பிரிகின்ற அன்றே உடைந்து வீழ்ந்தது.

ஜோயின் நெருங்கிய ஊர்ச் சினேகிதனான கொம்மாந்துறை 10ம் கட்டை வீதியிலுள்ள நாதன் என்பவரை ஜோய் தனது வாகனச் சாரதியாக நியமித்திருந்து, நாதனை முழுநோரப் போராளியாகச் சேர்த்திருந்தான் ஜோயின் அந்தச் சதியை (தந்திரத்தை) நாதன் தன் சகபோராளிகளிடம் விமர்சித்தான். இது கருணாவின் விசுவாசிகள் மூலம் கருணாவுக்குக் கூறப்பட்டது. இதை எப்படிச் சமாளிக்கலாம் எனக் கருணா சிந்தித்தான். தனது தனிப்பட்ட புலனாய்வாளர்களைச் சந்தித்து நாதனின் விடயம் கலந்தாலோசனை செய்யப்பட்டு நாதன் கைது செய்யப்பட்டான். நாதன் இயக்கத்தில் இருந்துகொண்டே இராணுவத்தினருடன் தொடர்பு வைத்துள்ளான் என்று பொய்க் குற்றச்சாட்டைச் சுமத்தி சக போராளிகளையும், மக்களையும் ஏமாற்றினார்கள். ஆனால் அதிகமான போராளிகளுக்கும் மக்களுக்கும் இது பொய் என்று தெரிந்தும் அவர்கள் பனைமட்டை அடிப் பயத்தினால் ஊமையாகிவிட்டனர். இதைச் சாதகமாகப் பயன்படுத்தி நாதனுக்குத் துரோகிப்பட்டம் கொடுக்கப்பட்டு, நாதன் கருணாவின் விசுவாசிகளால் கொலை செய்யப்பட்டான். அவனோடு அந்த உண்மை புதையவில்லை.

இதைவிட, மகிழவெட்டுவானைச் சேர்ந்த நபரொருவரையும் ஜோயின் இச் தந்திரம் பற்றி விமர்சித்த காரணத்தினால் பல குற்றச்சாட்டுக்கள் கூறிச் சுட்டுக்கொன்றனர். இதில் பல நபர்களை அடித்து நொறுக்கி மொட்டையடித்து இயக்கத்தை விட்டே துரத்தியே விட்டனர். அதில் ராயூமாமா, அகத்தி, கெசியர் போன்றோர் அடங்குவர். இதில் ராயூமாமா பிற்பகுதியில் .இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் கருணா குழவால் நித்திரையில் அவர் வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். கசியர் இயக்கத்ல் மருத்துவத் துறையில் இருந்ததால் ஜோயின் கழுத்துப் பகுதியில் ஊடுருவிய ரவையைப் பரிசோதித்து இது இராணுவத்தினரின் ரவையல்ல, இது எம்மவர்களின் துப்பாக்கி ரவை எனக் கசியர் எல்லாரிடமும் பேசத் தொடங்கினான். அதனால் கசியர் அடித்து நொறுக்கப்பட்டு இயக்கத்தைவிட்டே விரட்ப்பட்டான். இதனால் கசியர் இராணுவத்தினரிடம் சரணடைந்து உண்மையிலேயே ஒரு சந்தர்பபத் துரோகியானான். இவனை இந்த நிலைக்கு உருவாக்கியவர் அம்மான்தான். கசியர் இராணுவப் புலனாய்வுத் துறையிலிருந்து பிற்பகுதியில் கருணா ஆட்களாலேயே சுட்டுக் கொல்லப்பட்டான்.

ஜோய் எந்தத் தாக்குதல்மூலம் வீரச்சாவடைந்தானோ அந்த தாக்குதலில் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஜோயைக் கொல்ல வேண்டும் எனக் கருணா திட்டமிட்டான். இதுபற்றி அறிந்த ஜோய் தனது நெருங்கிய நண்பனான கென்றியிடம் கூறியுள்ளான். கென்றி யாழ்ப்பாணம் சென்று தலைவரிடம் இதுபற்றிக் கூறத் திட்டமிட்டான்

இதுபற்றி கென்றி யாருடன் கூறினானோ தெரியவில்லை! எது எப்படியோ கருணாவின் ஏவல் நாய்களுக்குத் தெரியவந்தது. உடனே கருணாவுக்குத் தெரியப்படுத்ப்பட்டது. யாழ்ப்பாணம் கென்றி செல்வதற்கு முன்னா கருணாவின் பணிப்பின் பேரில் அவன் கைது செய்யப்பட்டான். அவனை ஒரு முகாமில் வைத்து கருணாவின் முதன்மை விசுவாசத் தளபதி சித்திரவதை செய்தான். பின்னர் அவனே கென்றியை மண்வெட்டியால் துடிக்கத் துடிக்க அடித்துக் கொன்றான். மற்ற விசுவாசிகளும் சேர்ந்தே அடித்துக் கொன்றனர். நாதனுக்கு எந்தப் பட்டம் சூட்டப்பட்டதோ அதே பட்டந்தான் கென்றிக்கும் சூட்டப்பட்டது. நாதனுடன் புதையாத உண்மை கென்றியுடன் தொடங்கி அப்போதைக்குப் புதைக்கப்பட்டது. அந்தப் படுபாதகச் செயலை நேரடியாக நின்று பார்த்த சக போராளிகள் அதிர்ச்சியில் உறைந்திருந்தனர். உண்மை தெரிந்ததும் தங்களுக்கும் அந்த நிலை வரலாம் என மௌனமாகிவிட்டனர்.

ஜோயினால் இறுதியில் மேற்கொள்ளப்பட்ட அந்தத் தாக்குதலில் 17 ஏ. கே ரகத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன என்று ஏற்கெனவே இதற்கு முன்னர் கூறியுள்ளேன். ஆனால் இராணுவத்தினர் அச் சண்டையில் ஏ. கே ரகத் துப்பாக்கிகளையே கொண்டிருந்தனர். எம் 16 ரக துப்பாக்கிகள் அவர்கள் கொண்டு வரவில்லை!

ஆனால் ஜோயின் கழுத்துப் பகுதியில் ஊடுருவியதோ எம் 16 ரகத் துப்பாக்கியின் 5.56 அளவு கொண்ட ரவை! 7.62 நடுத்தர ரவையான ஏ. கே. வகைத் துப்பாக்கி ரவை ஜோயைத் தாக்கவில்லை! இதை வெளிப்படையாகக் கசியர் கூறியதனால்தான் அவன் இயக்கத்தை விட்டே கலைக்கப்பட்டான்.

அப்படியாயின் ஜோயிக்கு நடந்தது என்ன?!

மர்மம்! ...... மர்மம் ! தொடரும்…வாழ்க தமிழ்த் தேசியம்.அன்புடன் ஜரோப்பாவிலிருந்து A.M.T.KUDDY 


ஜரோப்பாவிலிருந்து A.M.T.KUDDY
Comments (1) >>

nilavan said:

 
unkal akkankal mikavum nallathu.
unmaikal orupothum alivathillai
valka tamil malarka tamilelam nanri
August 19, 2007
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..