பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள் arrow ஒரு கிலோ வெடி மருந்துடன் பிடிபட்ட உல்லாசப் பயணப் பஸ்வண்டி!
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

ஒரு கிலோ வெடி மருந்துடன் பிடிபட்ட உல்லாசப் பயணப் பஸ்வண்டி! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 12 September 2005
ஒரு கிலோ வெடிமருந்தைக் காவியபடி உல்லாசப்பயண பஸ்வண்டி யொன்று டென்மார்க்கினு}டாக சுவீடன் தலைநகர் போகும் வழியில் பிடிக்கப்பட்டது. ஜேர்மனியில் இருந்து றொஸ்ரொக் கடல்வழியை கப்பல் மூலமாகக் கடக்கும் போது போலீசாரின் சம்பிரதாய பூர்வமான சோதனையின் போது இந்த வெடிமருந்தை ஜேர்மன் போலீசார் கண்டறிந்தனர். மேற்படி பஸ் வண்டி கப்பல் மூலம் டென்மார்க் கரைக்குவர வெடிமருந்து கண்டு பிடிக்கும் நாய்களின் உதவியுடன் பஸ் வண்டி சல்லடை போட்டுத் தேடப்பட்டது. ஆனால் வெடி மருந்து கிடைக்கவில்லை. இந்த வெடிமருந்து கொண்டு வந்தது தொடர்பாக 44 வயதுடைய பொஸ்னியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இவர் தனது குற்றத்தை மறுத்துள்ளார். இவரை மட்டும் தடுத்து வைத்த போலீசார் மற்றப் பயணிகளுடன் பஸ்வண்டியை போக அனுமதித்தனர். இவர் ஏன் வெடிமருந்தை எடுத்துச் சென்றார், இதன் தேவை என்ன என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. பஸ்வண்டி பொஸ்னியாவில் இருந்து ஸ்ரொக்கோம் வரை செல்கிறது.
Nirojan S
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..