|
கருணா போர்க்குற்றம் புரிந்தவர் - நியூயோர்க் மனித உரிமை அமைப்பு |
|
|
|
Sunday, 04 November 2007 |
 சிறுவர்களைக் கடத்தி, கட்டாயப் பயிற்சி வழங்கிவரும் கருணா ஒட்டுக்குழுவின் தலைவரான முரளிதரன் விநாயகமூர்த்தி மீது போரியல் குற்றத்தின் கீழ் பிரித்தானியா சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நியூயோர்க்கை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற கருணா, ஒட்டுக்குழுவாக
இயங்கி சிறுவர்களைக் கடத்திச் சென்று கட்டாய பயிற்சி வழங்குதில் வல்லுனராக
திகழ்ந்து வருவதாக, மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக றொயிற்றர் செய்திச் சேவைக்கு மேலும் கருத்துரைத்த மனித
உரிமைகள் கண்காணிப்பகத்தின் மூத்த சட்ட ஆலோசகர் ஜிம் றோஸ், பொதுமக்கள்
மீதான தாக்குதல்கள், சிறுவர் கடத்தல், மனித உரிமை மீறல் போன்றவற்றுக்கு
கருணா மீது பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுத்த பின்னரே
சிறீலங்காவிற்கு அவரை நாடு கடத்துவது பற்றி சிந்திக்க வேண்டுமென
வலியுறுத்தியிருக்கின்றார்.
நெருடல் இணையம்
|