பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English
viiravanakkam-nerudal-small2
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

உயிரின் விலை ஒரு ரூபாயா? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 08 October 2005

12 வயதுச் சிறுமியொருத்தி மதிய உணவுக்கு ஒரு ரூபாய் கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள். இதைவிட என்ன கொடுமை வேண்டிக் கிடக்கின்றது? இந்தியாவின் கல்கத்தா நகரில்தான் இந்தக் கொடுமை இடம்பெற்றிருக்கின்றது. பொதுவாகவே இந்தச் சிறுமிக்கு பாடசாலையில் எதுவுமே உண்ணக் கிடைப்பதில்லை. ஒரு வெள்ளியன்று தன்னோடு படிக்கும் சிறுமிகள் சோறும் கறியும் சாப்பிட்டதைப் பார்த்தபோது இவளுக்கும் சோற்றில் ஆசை வர வீட்டுக்கு ஓடிவந்து தாயிடம் ஒரு ரூபாய் தரும்படி கெஞ்சியிருக்கின்றாள். ஆனால் அந்தத் தாய்க்கோ அதற்கு வழியில்லை.

பொதுவாக தான் வேலை செய்யும் வீடுகளில் மிச்சமாகக் கிடைக்கும் உணவைக் கொண்டுவந்துதான் மகளுக்குக் கொடுப்பது வழக்கமாக இருந்தது. இவளுக்கு ஆண் பிள்ளைகளும் உண்டு. தனக்கு மாத வருமானமாக 13 இந்திய ரூபாய்களுக்கு மேல் கிடைப்பதில்லையாம். தன் மகள் சோறும் கறியும் கேட்க சீறிப் பாய்ந்து விட்டு தாய் வேலைக்குப் போய்விட்டாள். வீடு திரும்பியபோது சேலையால் கழுத்தில் சுருக்குப் போட்டுக் கொண்டு தொங்கும் மகளின் உடலைத்தான் காணமுடிந்துள்ளது. இங்கு நமக்கு மூன்று வேளையும் மூக்கு முட்டச் சாப்பிட முடிகின்றது. கொடுக்கும் சாப்பாட்டை உண்பதிலும் அலட்சியம். காட்டுகிறோம். வறுமையின் கொடுமையை நமது பிள்ளைகளும் அறிவார்களா?



நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..