பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

மன்னாரில் படைக்காவி தகர்ப்பு! 9 படையினர் பலி! மேலும் பலர் படுகாயம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 06 May 2008

மன்னார் கறுக்காய்க்குளம் பகுதியில் இருந்து வட்டக்கண்டல் நோக்கி முன்னேற முயன்ற படையினர் மீது  விடுதலைப் புலிகள் உக்கிரமான வழி மறிப்பு தாக்குதலில் ஈடுபட்டு படையினரை பழைய நிலைகளுக்கு பின்வாங்கச் செய்துள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை காலை 8.15 மணிக்கு பலத்த கனரக சூட்டாதரவுடன் முன்னேறிய படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகளின் பலத்த எதிர்த் தாக்குதலை நடத்தினர்.

இதனையடுத்து சிறீலங்காப் படையினர் டாங்கிகள் மற்றும் படைக்காவிகளையும் களமிறக்க  முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டனர். இதன் போது ஒரு படைக்காவி புலிகளின் கண்ணி வெடியில் சிக்கி தகர்ந்துள்ளது. இதில் பயணித்த 9 படையினர் சம்பவ இடத்தில்  பலியாகியுள்ளனர். மேலும் பல படையினர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை நேற்றுக் செவ்வாய்க்கிழமை காலை 5:30 மணிக்கு திருக்கேதீஸ்வரத்தில் இருந்தும் படையினர் இன்னொரு நகர்வை மேற்கொண்டனர்.

பல்குழல் வெடிகணைகள், ஆட்டிலறிகள் எறிகணைகள் கனரக ஆயுதங்கள் சகிதம் படையினர் இந்த முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்நகர்வும் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டள்ளது. படையினரின் முன்னேற்ற முயற்சியைக்கு எதிராக போராளிகள் பலத்த எதிர் தாக்குதலைத் தொடுத்து படையினரை பழைய நிலைகளுக்க விரட்சியடித்துள்ளனா.

இதில் சிறீலங்காப் படையினருக்கு பலத்த இழப்புக்கள் எற்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..