பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

கிழக்கு வன்முறைகளை முற்றாக நிறுத்தமுடியாது அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 07 May 2008

கிழக்கு மாகாண மக்கள் அச்சுறுத்தப்பட்டிருப்பதால் தேர்தல் வன்முறைகள் குறித்து பொலிஸாரிடமோ அல்லது தேர்தல் கண்காணிப்புக் குழுவினரிடமோ முறையிடுவதற்கு அச்சம் அடைந்திருப்பதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையம் தெரிவித்துள்ளது.

இதனால் கிழக்கில் வன்முறைகளை முற்றாக முடிவுக்குக்கொண்டுவருவது இயலாத காரியமென தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையத்தின் உறுப்பினர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து கூறியுள்ளார்.

திருகோணமலையிலிருந்து இடம்பெயர்ந்து மட்டக்களப்பில் தங்கியிருப்பவர்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் 32 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனினும், மூதூர், கின்னியா, வெருகல் மற்றும் சம்பூர் ஆகிய பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையம் எச்சரித்துள்ளது.

தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையத்தின் தகவலின் அடிப்படையில் அம்பாறையில் 36 வன்முறைச் சம்பவங்களும், மட்டக்களப்பில் 21 வன்முறைச் சம்பங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. எனினும் எல்லா முறைப்பாடுகளும் சிறிய தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பற்றியது. தெரிவுசெய்யப்பட்ட வாக்களிப்பு நிலையங்களுக்கு மேலதிகமாக 49 நடமாடும் தேர்தல் கண்காணிப்பு குழுக்களை அந்த நிலையம் உருவாக்கியுள்ளது.

தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான அறிக்கை தேர்தல் தினத்தன்று வெளியிடப்படுவதுடன், பிந்திய விரிவான அறிக்கை பின்னர் வெளியிடப்படுமென தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் அமைப்பு அறிவித்துள்ளது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..