|
மனித உரிமைக் குழுவில் பாகிஸ்தான், இலங்கையை நீக்க கோரிக்கை |
|
|
|
Wednesday, 07 May 2008 |
|
பாகிஸ்தான் , இலங்கை, ஜாம்பியா, பஹ்ரைன், ஆகிய நாடுகளை ஐ.நா. சபையின் மனித உரிமைப் பாதுகாப்புக் குழுவிலிருந்து நீக்க வேண்டும் என்று மனித உரிமைகளைக் கண்காணிக்கும் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
நியூயார்க்கில் செயல்படும் அமைப்பும், ஜெனீவாவில் செயல்படும் அமைப்பும் இதைத் தெரிவித்துள்ளன.
பஹ்ரைனைத் தவிர மற்ற 4 நாடுகளும் ஐ.நா. மனித உரிமைப் பாதுகாப்புக் குழுவில் இடம்பெற்றுள்ளன. இந்த 5 நாடுகளிலும் மனித உரிமை மீறல்கள் அதிகமாக நடப்பதாக இரு அமைப்புகளும் தெரிவித்துள்ளன.
ஐ.நா. சபையின் மனித உரிமைக் குழுவில் 15 நாடுகள் மே 21-ம் தேதி புதிதாக சேர்க்கப்படவுள்ளன.
நெருடல் இணையம்
|