|
அமரிக்காவுடனும் ஈரானுடனும் உறவை சமமாக பேண இலங்கை முயற்சி |
|
|
|
Thursday, 08 May 2008 |
|
இலங்கை அரசாங்கம் ஈரானுடனும் அமரிக்காவுடனும் உறவுகளை சமமாக பேணுவதற்கு முயற்சிப்பதாக இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானிய ஜனாதிபதி அஹமதிநிஜாட் அண்மையில் இலங்கை வந்ததை அடுத்து அமரிக்கா இலங்கைக்கு எச்சரிக்கைகளை விடுத்திருந்தது.
அணுவாயுத விடயத்தில் தமக்கு எதிரியான ஈரானுடன் இலங்கை இணங்கிச்செல்வது தொடர்பாக அமரிக்கா இலங்கையை எச்சரித்திருந்தது.எனினும் இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச. இதனை கருத்திற் கொள்ளாமல் ஈரானுடன் பல அபிவிருத்தி உடன்பாடுகளில் கைச்சாத்திட்டார். இந்ஷதநிலையில் ஈரான் இலங்கைக்கு பாதுகாப்பு விடயங்களில் ஒத்துழைப்பை வழங்க முன்வந்தபோதும் அதனை மஹிந்த ராஜபக்ச நிராகரித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த முனைப்பு அமரிக்காவுடனும் தமது உறவை நீடித்துக்கொள்வதற்காகவே என குறித்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. அமரிக்காவில் உயரதிகாரிகளை சந்தித்த இலங்கையின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் இலங்கையுடன் இராணுவ ஒத்துழைப்பு குறித்து அந்த நாட்டின் இராணுவ அதிகாரி தெரிவித்ததாக கூறப்படும் கருத்தை மறுத்துள்ளார்.
நெருடல் இணையம்
|